
புதுடெல்லி, பிப்ரவரி19-
தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களை கவர அரசு பணத்தில் இலவசங்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற இலவசங்களை மறுபரிசலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
தேர்தலுக்கு முன் ‘இலவசங்கள்’ விநியோகிப்பது தொடர்பாக இன்று தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது, மேலும் இதே போல் செயல்படும் மற்ற மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.”இலவச உணவு, இலவச மின்சாரம், இலவச சைக்கிள் வழங்குவதை நீங்கள் தொடங்கினால்… நீங்கள் என்ன வகையான கலாச்சாரத்தை வளர்க்கிறீர்கள்” என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தமிழக அரசிடம் கேட்டார். இந்தியா முழுவதும் என்ன வகையான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு, ஒரு நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் வழங்க விரும்புவது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், வாங்கக்கூடியவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் காட்டாமல், நீங்கள் விநியோகிக்கத் தொடங்கினால்… அது ஒரு வகையான சமாதானக் கொள்கையாக இருக்காதா?” என்று தலைமை நீதிபதி கேட்டார்.
2024 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்த விதிகளின் விதி 23 ஐ எதிர்த்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்கள் தொடர்பாக ஒரு முக்கியமான விசாரணை நடைபெற்றுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடர்ந்த ஒரு மனுவை விசாரிக்கும் போது, இலவச கலாச்சாரம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.பொருளாதார வளர்ச்சி பாதிப்பு: “இலவச கலாச்சாரம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது; இதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாகுபாடற்ற விநியோகம்: ஏழைகளுக்கு உதவி செய்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் வசதி உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் இலவசங்களை (குறிப்பாக இலவச மின்சாரம்) வழங்குவது ‘வாக்காளர்களைத் திருப்திப்படுத்தும் கொள்கை’ என நீதிமன்றம் சாடியது.
வருவாய் பற்றாக்குறை: நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும்போது, வளர்ச்சியைப் புறக்கணித்துவிட்டு இத்தகைய இலவசங்களை வழங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். காலையில் இருந்து மாலை வரை உணவு, சைக்கிள், மின்சாரம் என எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தால், மக்கள் வேலை செய்ய மாட்டார்கள்; இது பணி கலாச்சாரத்தையே பாதிக்கும்” என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு எதிராக, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழக அரசின் மின்சார வாரியம் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசுக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
முக்கிய கவனத்திற்கு:
அரசு இத்தகைய இலவசங்களுக்கு செலவிடும் நிதியை, கல்வி மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு” முதலீடு செய்ய வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்தது.
மக்கள் வேலை செய்ய மாட்டார்கள்: உணவு மின்சாரம் பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக கொடுத்தால் மக்கள் வேலை செய்ய மாட்டார்கள் இதனால் நாட்டில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் இலவசங்களுக்கு வழங்கப்படும் நிதி மூலம் வளர்ச்சிக்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் வேண்டும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நதிமன்றம் கடுமையாக கூறியது
















