வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை

சென்னை: பிப்ரவரி 28-
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய்,செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்துநேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கும் நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும்
விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன்படி, கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனையாகிறது.தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை
செய்யப்படுகிறது.