ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர்: பாகிஸ்தான் அறிவிப்பு

காபூல்: பிப்ரவரி 28-பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இரு நாடு​களும் எல்​லை​யில் மாறி மாறி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதனால் ஆப்​கானிஸ்​தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்​தான் அமைச்​சர் அறி​வித்​துள்​ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்​கானிஸ்​தான் அரசை தலி​பான்​கள் கைப்​பற்​றினர். அப்​போது முதலே பாகிஸ்​தான் – ஆப்​கானிஸ்​தான் இடையே மோதல் நடை​பெறுகிறது. பாகிஸ்​தானில் நடை​பெற்ற சில தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு தலி​பான்​கள்​தான் காரணம் என்று பாகிஸ்​தான் குற்​றம் சாட்​டியது. அதற்கு பதிலடியாக ஆப்​கன் எல்​லை​யில் பாகிஸ்​தான் அவ்​வப்​போது தாக்​குதல் நடத்​தி​யது. இந்​நிலை​யில் தற்​போது கடந்த ஒரு வார​மாக இரு தரப்​பின் எல்​லை​யில் பயங்கர மோதல் நடை​பெற்று வரு​கிறது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை முதல் இருதரப்​பும் தாக்​குதலில் ஈடு​பட்டு வரு​கின்​றன.
இதற்கு பதிலடி​யாக ஆப்​கன் ராணுவம் பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​களில் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பாகிஸ்​தான் வீரர்​கள் 55 பேர் கொல்​லப்​பட்​ட​தாக​வும், அந்த நாட்​டின் பல்​வேறு ராணுவ நிலைகள் தங்​கள் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது என்​றும் தலி​பான்​கள் அறி​வித்​துள்​ளனர். கடந்த வாரம் ஆப்​க​னின் நங்​கர்​ஹார், பக்​திகா ஆகிய மாகாணங்​களில் பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பெண்​கள் உட்பட 13 பேர் இறந்​தனர்.
இதுகுறித்து பாகிஸ்​தான் பாது​காப்​புத் துறை அமைச்​சர் கவாஜா ஆசிப் கூறுகை​யில், ‘‘எங்​கள் பொறுமை எல்லை கடந்து விட்​டது. இப்​போது ஆப்​கானிஸ்​தான் மீது பகிரங்க போர் என்ற நிலைக்கு வந்​து​விட்​டது. இந்​தி​யா​வுடன் கைகோத்​துக் கொண்டு பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆப்​கன் தலி​பான்​கள் செயல்​படு​கின்​றனர். உலகில் உள்ள தீவிர​வா​தி​களை எல்​லாம் ஆப்​க​னில் சேர்த்​து, தற்​போது தீவிர​வா​தி​களை ஏற்​றுமதி செய்​கிறார்​கள்.
நாங்​கள் ஆப்​கானிஸ்​தானின் அண்டை நாடாக இருக்​கிறோம். எங்​களுக்கு அவர்​களைப் பற்றி நன்கு தெரி​யும். இனிமேல் அந்​நாட்​டின் மீது பகிரங்க போர்​தான் நடத்​தப்​படும்’’ என்று கூறி​னார்.
இதனால் இரு​நாட்டு எல்​லை​யில் பெரும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், ஆப்​க​னின் காபூல், காந்​த​கார், பக் ஷியா உட்பட பல நகரங்​கள் மீது பாகிஸ்​தான் நேற்​று​முன்​தினம் இரவு வான்​வழி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 274 தலிபான்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.