Home செய்திகள் தேசிய செய்திகள் ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்

ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்

புதுடெல்லி, ஏப்ரல் 15- ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரத் தடைகளால் ஈரானிட​மிருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்தி வைத்​திருந்​தது. இருப்​பினும், மேற்கு ஆசி​யப் போர்ச் சூழலால் சர்​வ​தேச சந்​தை​யில் ஏற்​பட்​டுள்ள எரிசக்தி நெருக்​கடியைச் சமாளிக்​கும் வகை​யில், ஏற்​கெனவே கப்​பல்​களில் ஏற்​றப்​பட்ட எண்​ணெயை மட்​டும் கொள்​முதல் செய்ய கடந்த மாதம் அமெரிக்கா தற்​காலிக விலக்கை இந்​தி​யா​வுக்கு அளித்​தது. இதன் அடிப்​படை​யில், ஈரான் உள்​ளிட்ட நாடு​களிட​மிருந்து எண்​ணெய் வாங்​கப் போவ​தாக உலகின் 3-வது பெரிய நுகர்வு நாடான இந்​தியா அறி​வித்​திருந்​தது. இதற்​கிடை​யில், ஈரானுட​னான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​த​தால், ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக வரும் கப்​பல்​களை முற்​றுகை​யிடப்​போவ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.இந்த அறி​விப்​பு, இந்​தி​யா​வுக்கு அளிக்​கப்​பட்ட தற்​காலிக விலக்கு மற்​றும் தற்​போதைய கொள்​முதல் நடவடிக்​கை​களில் எத்​தகைய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​பது இன்​னும் தெளி​வாகத் தெரிய​வில்​லை. இந்த நிலை​யில்​தான் கச்சா எண்​ணெயைக் ஏற்​றிக் கொண்டு வந்த இரு ஈரானிய கப்​பல்​கள் இந்​தி​யா​வில் நங்​கூரமிட்டு நிறுத்​தப்​பட்​டுள்​ளன. அதில் ஒன்​று​தான் பெலிசிட்​டி. தேசிய ஈரானிய எண்​ணெய் நிறு​வனத்​திற்​குச் சொந்​த​மான இந்​தக் கப்​பல், 20 லட்​சம் பேரல் கச்சா எண்​ணெ​யுடன் ஞாயிற்​றுக்​கிழமை இரவு குஜராத்தின் சிக்கா துறை​முகத்​திற்கு அருகே நங்​கூரமிட்​டது. இது மார்ச் மாத நடுப்​பகு​தி​யில் ஈரானின் கார்க் தீவிலிருந்து எண்​ணெயை ஏற்றி வந்​தது.