Home செய்திகள் தேசிய செய்திகள் ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்:

ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்:

திருப்பதி, ஏப்ரல் 22- திருப்​ப​தி​யில் உள்ள தேவஸ்​தான நிர்​வாக அலுவலகத்தில் நிர்​வாக அதி​காரி எம்.ரவிசந்​திரா தலை​மை​யில் தேசிய சிவில் சேவை​கள் தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது.இதில் ரவிசந்​திரா பேசி​ய​தாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம். பக்​தர்​களுக்கு உண்​மை​யான அன்பு மூலம் செய்​யும் சேவையே உன்​னத​மானது. தேசிய சிவில் சேவைகள் தினம் என்​பது ஐஏஎஸ் அதி​காரி​களுக்கு மட்​டுமே சம்​பந்​தப்​பட்​ட​தில்​லை. சேவை செய்​யும் ஒவ்​வொரு​வருக்​கும் இது பொருந்​தும். மக்​கள் – அரசு இடையே அரசு பணி​யாளர்​கள் ஒரு சேவகர்​களாக, பால​மாக பணி​யாற்​றிட வேண்​டும். நாம் அனை​வரும் ஓய்வு பெறும் வரை அர்ப்​பணிப்​போடு பணியாற்ற வேண்​டும். அரசு நிபந்​தனை​களுக்கு உட்​பட்​டு, சட்டங்​களை மீறாமல் பணி செய்​திட வேண்​டும் என்​பது எனது வேண்​டு​கோள். அதே​போல், அனை​வருக்​கும் புரி​யும் மொழி​யில் நாம் பேசி​னால்​தான் விஷய​மும் விரை​வாக விளங்​கும். முடிந்த அளவிற்கு தெலுங்​கில் பேச பழகுங்​கள். இவ்​வாறு ரவிசந்​திரா கூறினார்.