Home செய்திகள் தேசிய செய்திகள் அரசுக்கு கார்கே கேள்வி

அரசுக்கு கார்கே கேள்வி

புதுடெல்லி: ஆக. 20-
காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், காங்​கிரஸ் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே பங்​கேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யப் பகு​திக்​குள் சீனா ஊடுரு​வி​யுள்​ள​தாகக் கூறப்​படும் விவ​காரம் தொடர்​பாக, மோடி அரசு வெளிப்​படை​யாக விளக்​கம் அளித்​திருக்க வேண்​டும்.
வழக்​கம்​போல இந்​தத் தகவல்​கள் தவறானவை என்று அரசு மறுத்துள்​ளது. ராணுவம் தனது கடமையை சிறப்​பாகச் செய்து வரும் நிலை​யில், சீனா​வுட​னான எல்லை தொடர்​பான முக்கியமான கேள்வி​களுக்கு மத்​திய அரசு தெளி​வான தகவல்களை வழங்​க​வில்​லை.
அயோத்தி ராமர் கோயிலுக்கு மக்​கள் வழங்​கிய காணிக்கை எவ்வளவு? எவ்​வளவு தங்​கம், வெள்ளி மற்​றும் பிற விலைமதிப்புமிக்க பொருட்​கள் சேகரிக்​கப்​பட்​டன? அந்த சொத்துகளின் கணக்கு என்ன என்​பதை தெரிவிக்க வேண்​டும்.
கீழ்​நிலை​யில் உள்ள சிலரை மட்​டும் சிறை​யில் அடைப்​ப​தால் இந்தப் பிரச்​சினை தீர்ந்​து​வி​டாது. எனவே, இந்த விவ​காரம் தொடர்​பாக பிரதமர் மோடி பக்​தர்​களிடம் மன்​னிப்பு கேட்​டு, அவர்​களின் கேள்வி​களுக்கு பதிலளிக்க வேண்​டும்.