சீன அதிபருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

பீஜிங், ஜூலை 15- எல்லை பதற்றம் தணிந்த பிறகு முதல் முறையாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இருநாட்டு தலைவர்களும் கை குலுக்கி கொண்டனர்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம், நம் அண்டை நாடான சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று (ஜூலை 15) நடைபெறுகிறது. இதில் உறுப்பு நாடாக உள்ள நம் நாட்டின் சார்பில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.இதற்காக, சீனா சென்றுள்ள அவர், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை நேற்று சந்தித்து பேசினார். “இந்தியா – சீனா இடையே நல்லுறவை மேம்படுத்துவதன் வாயிலாக பரஸ்பரம் நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். உலகளவில் பதற்றமான சூழல் நிலவும் சூழலில், இரு தரப்புக்கும் இடையே கருத்து பரிமாற்றம் மிகவும் அவசியம்,” என, சீன துணை அதிபர் ஹான் ஜெங்கிடம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இருநாட்டு தலைவர்களும் கை குலுக்கி கொண்டனர்.