Home செய்திகள் தேசிய செய்திகள் மீண்டும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி;இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி

மீண்டும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி;இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி

புதுடெல்லி: மே 22-
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.
சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் விரும்புகிறார். இதனால், உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்​விரு கட்​சிகளும் கடந்த 2017 சட்​டப்​பேர​வைத் தேர்தலில் கூட்​டணி அமைத்​தன. ஆனால், குறிப்​பிடத்​தக்க வெற்றி கிடைக்​க​வில்​லை. எனினும், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் மீண்டும் கூட்​டணி அமைத்து போட்​டி​யிட்​டன.இதில், உ.பி.​யில் ஆளும் பாஜகவை வெற்​றிகர​மாக வீழ்த்​தி, சமாஜ்வாதி 37, காங்​கிரஸ் 6 எம்​.பி.க்​களைப் பெற்​றன. உ.பி.​யில் மொத்தம் உள்ள 80 மக்​கள​வைத் தொகு​தி​களில் பாஜக 33, அதன் கூட்டணிக் கட்​சிளுக்கு 3 இடங்​கள் கிடைத்​தன. பாஜக 41.37 சதவீத வாக்​கு​கள் பெற்​றது. சமாஜ்​வாதி 33.59 மற்​றும் காங்​கிரஸ் 9.46 சதவீத வாக்​கு​கள் பெற்​றன.பாஜகவை விட சமாஜ்​வா​தி​யும், காங்​கிரஸும் அதிக வாக்குகளைப் பெற்​ற​தால் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீண்​டும் இணைய இரு கட்​சிகளும் ஆர்​வம் காட்​டு​கின்​றன. இதுகுறித்து அகிலேஷ் கூறும்​போது, ”2027 தேர்​தலிலும் கூட்​ட​ணிக் கட்சிகளுடனான இணக்​கம் தொடரும். அப்​போது முக்​கியக் கேள்வி வெற்​றி​யாகத் ​தான் இருக்​குமே தவிர தொகு​தி​கள் அல்​ல” என்​றார்.