மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்

புதுடெல்லி: ஜூன் 23-
ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில் உள்ள இந்​தி​யர்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர்.
இதற்​கான ஏற்​பாடு​களை ஈரானில் உள்ள இந்​திய தூதரக​மும் மத்​திய வெளி​யுறவு அமைச்​சக​மும் செய்து வரு​கிறது. இது​வரை 4 தனி விமானங்​களில் மாணவர்​கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்​ளனர். இந்​நிலை​யில், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களு​டன் 5-வது விமானம் நேற்று மாலை டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தது.இதன்​மூலம் இது​வரை ஈரானிலிருந்து அழைத்து வரப்​பட்​ட​வர்​கள் எண்​ணிக்கை 1,428-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். அவர்​கள் இன்​றும் நாளை​யும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.இதுத​விர, நேபாளம் மற்​றும் இலங்​கை​யைச் சேர்ந்​தவர்​களை​யும் ஈரானிலிருந்து அழைத்​துவர தேவை​யான உதவி​கள் செய்​யப்​படும் என இந்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.