
திஸ்பூர், ஆக. 16- அருணாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அங்குள்ள அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில், கேயோஜரிங்-பயாச்சிங் சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், பாசு பானி ராணுவ முகாமில் உள்ள 5-வது கிரெனடியர்ஸ் படைப் பிரிவின் 2 தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் மாயமான 5 ராணுவ வீரர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.













