ஆட்சியில் பங்கு இல்லை – திமுக

சென்னை: டிசம்பர் 30 –
ஆட்​சி​யில் பங்கு கோரிக்​கையை ஏற்க முடி​யாது, கூட்​ட​ணிக்​குள் தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டாம் என காங்​கிரஸ் உட்பட தோழமை கட்​சிகளிடம் திமுக திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.
தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் இன்​னும் சில மாதங்​களில் நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான ஆயத்​தப் பணி​களை திமுக முழு​வீச்​சில் மேற்​கொண்டு வரு​கிறது. ஓரணி​யில் தமிழ்​நாடு, உடன்​பிறப்பே வா, மண்டல மாநாடு​கள் போன்ற தொடர் செயல்​பாடு​களை திமுக முன்​னெடுத்து வரு​கிறது. அதே​நேரம்
திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகள் மறை​முக​மாக​வும், வெளிப்​படை​யாக​வும் ‘ஆட்​சி​யில் பங்​கு’ என்ற கோரிக்​கைகளை முன்​வைத்து வரு​கின்​றன.
தவெக தலை​வர் விஜய், தனது கட்​சி​யின் முதல் மாநாட்​டில் பேசி​ய​போது கூட்​டணி ஆட்சி என அறி​வித்​தார். இதன்​தொடர்நிகழ்​வாக திமுக கூட்​ட​ணி​யில்
இந்த விவ​காரம் பேசுபொருளானது. எனினும், இதில் திமுக தொடர்ந்து மவுனம் காத்​து​வந்​தது. இந்​நிலை​யில் கூட்​டணி ஆட்சி கோரிக்​கையை ஏற்க முடி​யாது என தோழமை கட்​சிகளிடம் திமுக தலைமை திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​து​விட்​ட​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.
திமுகவைப் பொறுத்​தவரை சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கும் வேளை​யில், இது கூட்​ட​ணிக்​குள் தேவையற்ற குழப்​பத்தை ஏற்​படுத்​தும். வாக்​காளர்​களிட​மும் திமுக தனித்து மெஜாரிட்டி பெறாது என்ற தவறான பிம்​பத்தை உரு​வாக்​கி​விடும் என்று அதன் தலைமை கருதுகிறது. இதன் காரண​மாக தொகு​திப் பங்​கீட்​டில் வேண்​டு​மா​னால் சில சமரசங்​களை செய்​கிறோம். ஆனால், அதி​காரப் பங்​கீடு கோரிக்​கையை கைவிட வேண்​டுமென தோழமைக் கட்​சிகளிடம் திமுக தலைமை தெரி​வித்​து​விட்​ட​தாக திமுக தலைமை அலுவலக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.