இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு

டெஹ்ரான்: ஜூன் 17-
இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்று அங்கு வசிக்​கும் இந்​திய மாணவர்​கள் வெளி​யேற தரைவழி எல்​லைகளை ஈரான் அரசு திறந்​துள்​ளது. ஈரான் – இஸ்​ரேல் இடையே தாக்​குதல் தீவிரமடைந்துள்ளது. இந்​நிலை​யில், ஈரானில் தற்​போது 4,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பாதிக்​கும் மேற்​பட்​டோர் மாணவர்​கள். ஈரானில் உள்ள பெரும்​பாலான இந்​திய மாணவர்​கள் ஜம்​மு-​காஷ்மீரை சேர்ந்​தவர்​கள்.
இந்​நிலை​யில் ஈரானில் படிக்​கும் மாணவர்​களை பாது​காப்​பாக வெளி​யேற்ற உதவு​மாறு ஈரான் அரசை, இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டதற்கு இணங்க, தங்​களது தரைவழி எல்​லைகளை திறந்​துள்​ள​தாக​வும், அதன் வழி​யாக மாணவர்​கள் பாது​காப்​பாக வெளி​யேறலாம் என்​றும் ஈரான் அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.
ஈரான் அரசு வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “ஈரான் மீதான வான்​வழி மூடப்​பட்​டிருந்​தா​லும், பொது​மக்​கள் பாது​காப்​பாக நாட்டை விட்டு வெளி​யேறும் வகை​யில் அனைத்து தரைவழி எல்​லைகளும் திறந்​திருக்​கும். மாணவர்​கள் பாது​காப்​பாக செல்​லலாம்” என்று கூறப்​பட்​டுள்​ளது.
இந்​தி​யத் தூதரகம் ஏற்​பாடு: இந்​நிலை​யில், அங்​குள்ள இந்​தி​யர்​களை ஈரானுக்​குள்​ளேயே பாது​காப்​பான இடங்​களுக்கு வெளி​யேற்​றும் பணி​களை இந்​திய தூதரகம் தொடங்​கி​யுள்​ளது. மேலும், விரை​வில் அவர்​களை இந்​தி​யா​வுக்கு திருப்பி அழைத்​து​வரும் நடவடிக்​கைகள் குறித்​தும் ஆய்வு செய்​யத் தொடங்​கி​யுள்​ள​தாக தூதரகம் தெரி​வித்​துள்​ளது. 3 நாட்கள் தூங்கவில்லை: ஈரானில் சுமார் 1,500-க்​கும் மேற்​பட்ட இந்​திய மாணவர்​கள் கல்வி பயில்​கின்​றனர். ஈரான் தலைநகர் தெஹ்​ரானை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள் கடந்த சில நாட்​களாக குண்​டுமழை பொழிந்து வரு​கின்றன. இதுகுறித்து 3-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் மாணவர் இம்​தி​சால் மொகிதீன் கூறும்​போது, “தெஹ்​ரானில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​யில் சுமார் 350 இந்​திய மாணவ, மாண​வியர் எம்​பிபிஎஸ் படித்து வரு​கின்​றனர். எங்​களது விடுதி அமைந்​துள்ள இடத்​துக்கு அரு​கில் குண்​டு​கள் வீசப்​படு​கின்​றன. கடந்த 3 நாட்​களாக நாங்​கள் தூங்​க​வில்​லை. விடு​தி​யின் அடித்​தளத்​தில் தஞ்​சமடைந்து உள்​ளோம். மிகுந்த அச்​சத்​துடன் வாழ்ந்து வரு​கிறோம். மத்​திய அரசு எங்​களை பத்​திர​மாக மீட்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார். இஸ்​ரேல் நாட்​டில் சுமார் 32,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பெரும்​பாலானோர் தொழிலா​ளர்​கள் ஆவர். அவர்​கள் பாது​காப்​பான இடங்​களில் தங்க வைக்​கப்​பட்டு இருப்​ப​தாக இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.