
வாஷிங்டன், நவ. 22- நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இருவரும் பல மாதங்களாக ஒருவருக்கொருவர் எதிராக கடுமையாக விமர்சித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு அண்மையில் நடந்த மேயர் தேர்தலில், 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்றார். தேர்தலின் போது, அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் ஜோஹ்ரான் மம்தானி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அதே போல் மம்தானியை டிரம்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக மம்தானியை கம்யூனிஸ்டு என்று விமர்சித்து வந்த டிரம்ப், அவர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் மோசமாகிவிடும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் மம்தானி, அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
இருவரும் பல மாதங்களாக ஒருவருக்கொருவர் எதிராக கடுமையாக விமர்சித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது. சந்திப்புக்கு பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது: மம்தானியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்தது. அவர் மிகச் சிறந்த வேலையைச் செய்ய முடியும்எ ங்களுக்கு ஒரு பொதுவான விஷயம் உள்ளது.
இந்த நகரத்திற்காக மிகவும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறோம். மேயரை வாழ்த்த விரும்பினேன். ஆரம்பகால முதன்மைத் தேர்வுகளில் தொடங்கி, பல புத்திசாலி மக்களுக்கு எதிராக அவர் உண்மையிலேயே நம்பமுடியாத பந்தயத்தை நடத்தினார். மேலும் அவர் அவர்களை எளிதாக வென்றார்,

















