
டெஹ்ரான்: ஜுலை 10-
அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள், 14 மாத பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டனர். போர் தொடர்ந்ததால் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறவில்லை.
இந்த சூழலில் போர் பதற்றம் தணிந்த காரணத்தால், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கமேனி உள்ளிட்ட உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுகள் கடந்த வாரம் தொடங்கின. அவர்களின் உடல் பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று (ஜூலை 10) ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி அவரது உடலை ஈரான் நல்லடக்கம் செய்தது. அந்த பகுதியில் திரளான மக்கள் திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்.


















