எரிசக்தி மேம்பாட்டுக்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களில் முதலீடு

புதுடெல்லி, ஜூலை 17- வேளாண் மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மேம்​பாட்டு திட்​டங்​களில் ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய மத்திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. மத்​திய அமைச்​சரவை கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று நடை​பெற்றது.இதில் பிரதமரின் தன் தானிய வேளாண் திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் அடை​யாளம் காணப்​படும் 100 மாவட்​டங்​களில், நடப்பு நிதி​யாண்டு முதல் 6 ஆண்டு காலத்​திற்கு செயல்​படுத்​தப்​படும். வேளாண் துறை​யிலும் அது சார்ந்த துறை​களி​லும் விரை​வான வளர்ச்​சியை எட்​டு​வது தொடர்​பாக இத்​திட்​டம் கவனம் செலுத்​தும்.
இத்​திட்​டம், வேளாண் உற்​பத்​தித்​திறனை மேம்​படுத்​துதல், பயிர் பல்​வகைப்​படுத்​தல், நிலை​யான விவ​சாய நடை​முறை​களை ஊக்​கு​வித்​தல், அறு​வடைக்​குப் பிந்​தைய தானிய சேமிப்​புத் திறனை அதி​கரித்​தல், நீர்ப்​பாசன வசதி​களை மேம்​படுத்​துதல், விவ​சா​யிகளுக்​குக் கடன்​கள் கிடைப்​பதை எளி​தாக்​குதல் ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.
இந்​தத் திட்​டம், மத்​திய அரசின் 11 துறை​கள், மாநில அரசுகளின் திட்​டங்​கள், தனி​யார் துறை​யினர் ஆகியோரின் கூட்டு ஒத்​துழைப்​புடன், தற்​போது நடை​முறை​யில் உள்ள 36 திட்​டங்​களு​டன் இணைத்து செயல்​படுத்​தப்​படும். குறைந்த உற்​பத்​தித்​திறன், குறைந்த பயிர் சாகுபடி, விவ​சா​யிகளுக்​குக் குறைந்த கடன் வழங்​கல் ஆகியவை உள்ள 100 மாவட்​டங்​கள் அடை​யாளம் காணப்​பட்டு அந்த மாவட்​டங்​ளில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.
ஒவ்​வொரு மாநிலம் அல்​லது யூனியன் பிரதேசத்​தி​லும், மாவட்​டங்​களின் எண்​ணிக்கை நிகர பயிர் பரப்​பளவு, நிலங்​களின் பங்கு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட இருக்​கும் மாவட்​டங்​கள் தேர்வு செய்​யப்​படும். எனினும், ஒவ்​வொரு மாநிலத்​திலிருந்​தும் குறைந்​த​பட்​சம் ஒரு மாவட்​டம் தேர்ந்​தெடுக்​கப்​படும். ஆண்​டுக்கு ரூ.24,000 கோடி மதிப்​பில் 6 ஆண்​டு​களுக்கு மேல் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.
இதன் மூலம் நாடு முழு​வதும் 1.7 கோடி விவ​சா​யிகள் பயனடைவர். என்டிபிசி நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மான என்​டிபிசி கிரீன் எனர்ஜி நிறு​வனத்​தில் (என்​ஜிஇஎல்) ரூ.20,000 கோடி முதலீடு செய்​ய​வும் மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது.