ஓமனுடன் தடையற்ற வர்த்தகம்

மஸ்கட்: டிசம்பர் 19-
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்​னிலை​யில் இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்​தம் நேற்று கையெழுத்​தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு அந்நாட்டில் வரிரத்தாகிறது. அங்கிருந்து இறக்குமதியாகும் 95 சதவீத பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
எத்​தி​யோப்​பியா பயணத்தை முடித்​துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்​தினம் ஓமன் சென்​றார்.
அவரது முன்​னிலை​யில் இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் நேற்று கையெழுத்​தானது. இந்​திய வர்த்தகம், தொழில் ​துறை அமைச்​சர் பியூஷ் கோயல், ஓமன் வர்த்தக அமைச்​சர் குவா​யிஸ் பின் முகமது அல் யூசப் கையெழுத்​திட்​டனர்.இதன்மூலம் இந்​தியா ஏற்​றுமதி செய்​யும் ஜவுளி, பிளாஸ்​டிக் பொருட்​கள், பர்னிச்​சர்​கள், மருந்துப் பொருட்​கள், மருத்​துவக் கருவி​கள், வாக​னங்​கள் உள்ளிட்ட 99 சதவீத பொருட்​களுக்கு ஓமனில் அடுத்த ஆண்டு முதல் வரி ரத்தாகிறது. அதே​போல, ஓமனில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பேரீச்​சம்பழம், பளிங்கு கற்​கள், பெட்ரோ ரசாயனப் பொருட்​கள் உட்பட 95 சதவீத பொருட்களுக்கான இறக்​கும​தி வரியை இந்​தியா குறைத்​துள்​ளது.ஓமனில் இருந்து ஆண்​டுக்கு 2 ஆயிரம் டன்பேரீச்​சம்பழங்​களை வரி​யின்றி இறக்​குமதி செய்து கொள்ளலாம்.இந்​தியப் பொருட்​களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்​துள்ள நிலை​யில், இந்​தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒப்பந்த ​நிகழ்ச்​சிக்​கு பிறகு, இந்​தி​ய வம்சாவளியினர், தொழில​திபர்​களை பிரதமர் மோடி சந்​தித்தார். அவர் பேசிய​தாவது: தீபாவளிப் பண்​டிகையை யுனெஸ்கோ தனது கலாச்​சார பட்​டியலில் இணைத்​துள்​ளது. இனி நம்தீபம் உலகையே ஒளிரச்செய்யும்.