Home மாவட்டங்கள் பெங்களூர் கன்னியாகுமரியில் கோடை சீஸன் களைகட்டியது

கன்னியாகுமரியில் கோடை சீஸன் களைகட்டியது

நாகர்கோவில்: மே 18 –
கன்​னி​யாகுமரி​யில் சுற்றுலா பயணி​கள் வருகை அதி​கரித்​திருப்​ப​தால் கோடை சீஸன் களை​கட்​டி​யுள்​ளது. சூரிய உதயத்தை காண சுற்​றுலா பயணி​கள் ஆர்​வம் காட்​டினர்.
சுற்​றுலா தலமான கன்​னி​யாகுமரிக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான உள்​நாட்டு மற்​றும் வெளி​நாட்டு சுற்​றுலா பயணி​கள் வந்து செல்​கிறார்​கள். ஞாயிறு விடு​முறையை முன்​னிட்டு நேற்று கன்​னி​யாகுமரி​யில் ஏராள​மான சுற்​றுலா பயணி​கள் குவிந்​தனர்.
முக்​கடலும் சங்​கமிக்​கும் திரிவேணி சங்​கமம் கடற்​கரை பகு​தி​யில் அதி​காலை​யில் சூரியன் உதய​மாகும் காட்​சியை காண ஏராள​மானோர் திரண்​டனர். சூரியன் உதய​மான காட்​சியை கண்டு ரசித்​தனர். சூரிய உதயம் தெளி​வாக தென்​பட்​ட​தால் மகிழ்ச்சி அடைந்​தனர்.
அதனைத்​ தொடர்ந்து கன்​னி​யாகுமரி முக்​கடல் சங்​கமத்​தில் புனித நீராடி பகவதி அம்​மன் கோயி​லில் தரிசனம் செய்​தனர். பின்​னர் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து படகு சவாரி செய்​தனர்.
காலை​யில் 7 மணிக்கு படகு சேவை தொடங்​கிய நிலை​யில் ஆவலுடன் படகில் பயணம் செய்து விவே​கானந்​தர் நினைவு மண்​டபத்தை பார்​வை​யிட்​டனர். கண்​ணாடி இழை கூண்டு பாலம் வழி​யாக நடந்து சென்று திரு​வள்​ளுவர் சிலையை பார்த்​தனர். சுற்​றுலா தலங்​களான காந்தி நினைவு மண்​டபம், காம​ராஜர் மணிமண்​டபம், சுனாமி நினை​வுப் பூங்கா உள்பட அனைத்து சுற்​றுலா தலங்​களி​லும் காலை​யில் இருந்தே கூட்​டம் நிரம்பி வழிந்​தது.