கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பா?

சென்னை: ஜனவரி 27-
பிளாஸ்​டிக் கவர்​களில் சூடான டீ, காபி, சாம்​பார் போன்​றவற்றை வாங்கி பயன்​படுத்​து​வ​தால், கரு​வில் இருக்​கும் குழந்​தைக்​கும் பாதிப்பு ஏற்​படு​மா என்​பது குறித்து மத்​திய, மாநில அரசுகள் விரி​வாக ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.
சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வனம் மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்​கும் நீதிப​தி​கள் என்.சதீஷ்கு​மார், டி.பரதசக்​ர​வர்த்தி ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில், பிளாஸ்​டிக் கவர்​களில் சூடான டீ, காபி, சாம்​பார் போன்​றவற்றை வாங்கி பயன்​படுத்​து​வ​தால், பிளாஸ்​டிக் கவர் தயாரிப்​புக்கு பயன்​படும் ‘பிஸ்​பி​னால்​-ஏ’ எனும் மைக்ரோ பிளாஸ்​டிக் வேதித் துகள்​கள் கர்ப்​பிணி​யின் நஞ்​சுக்​கொடி வழி​யாக கருப்​பைக்​குள் சென்று கரு​வில் இருக்​கும் குழந்​தைகளுக்​கும் பாதிப்​பு​களை ஏற்​படுத்​து​வ​தாக தனி​யார் பல்​கலைக்​கழகம் மேற்​கொண்ட ஆய்​வறிக்கை சமர்ப்​பிக்​கப்​பட்​டது.
அதையடுத்​து மனிதர்​கள், விலங்​கு​கள் மற்​றும் தாவரங்​களுக்கு ‘மைக்ரோ பிளாஸ்​டிக்’ தாக்​கம் உள்​ளதா என்​பது குறித்து மத்​திய சுகா​தா​ரம் மற்​றும் குடும்பநலத்​துறை அமைச்​சகம், சுற்​றுச்​சூழல், வனம் மற்​றும் காலநிலை மாற்​றத்​துக்​கான அமைச்​சகம், தமிழக அரசின் சுகா​தா​ரத்​துறைச் செயலர், உணவு பாது​காப்பு மற்​றும் மருந்து நிர்​வாகத் ​துறை ஆணை​யர் உள்​ளிட்​டோர் அறிக்கை தாக்​கல் செய்ய நீதிப​தி​கள் ஏற்​கெனவே உத்​தர​விட்டனர்.