
கரூர்: அக்.31-
கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் தவெகவினர் பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் சில முக்கிய ஆவணங்களுடன் கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 
