கர்நாடக குகையில் ரஷ்ய பெண் மீட்பு

பெங்களூரு:ஜூலை 14- கர்​நாட​கா​வில் அடர் வனப்​பகு​தி​யில் உள்ள குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த பெண் ஒரு​வர் தனது 2 மகள்​களு​டன் தங்கி இருந்​தார். அவரை அம்​மாநில போலீ​ஸார் பத்​திர​மாக மீட்​டனர். கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்​துள்​ளது.
அங்​குள்ள வனப்​பகு​தி​யில் சுற்​றுலாப் பயணி​கள் சட்​ட​விரோத​மாக மலை​யேற்​றம், சவாரி ஆகிய​வற்​றில் ஈடு​படு​வ​தாக போலீஸாருக்கு தகவல் கிடைத்​தது.
இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்​வாளர் தர் தலை​மையி​லான காவல் துறை​யினர் கடந்த 9-ம் தேதி ரோந்து பணியில் ஈடு​பட்​டனர். அப்​போது வனப்​பகு​தி​யில் நிலச்​சரிவு அபா​யம் மிகுந்த பகு​தி​யில் உள்ள குகை​யில் பெண் ஒரு​வர் தங்கியிருப்​பதை கண்​டறிந்​தனர். இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் பத்​திர​மாக மீட்டு விசா​ரணை நடத்​தினர். ஆன்​மிகத்​தில் நாட்​டம்: இதுகுறித்து போலீ​ஸார் கூறியதாவது: கு​கை​யில் இருந்து மீட்​கப்​பட்ட பெண்​ணின் பெயர் நினா குடினா (40). ரஷ்​யாவை சேர்ந்த அவர் தனது மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) ஆகியோ​ருடன் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவுக்கு சுற்​றுலா பயணி​யாக வந்​தார். ஆன்​மிகத்​தில் நாட்​டம் கொண்ட அவர், இங்​குள்ள சாமி​யார்​களின் மடங்​களில் தங்கி யோகாசனம் கற்​றுள்​ளார்.