காந்தி ஓவியம் ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை

லண்டன், ஜூலை 16 – போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில், காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது. பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டனால் வரையப்பட்ட காந்தி ஓவியம், நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் மூன்று மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைன் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது. ஓவியம் ஆன்லைனில் விற்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். 1931ம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி லண்டனுக்குச் சென்ற போது அவரை கிளேர் லெய்டன் சந்தித்துள்ளார். அப்போது ஓவியம் வரைவதற்கு வசதியாக காந்தி போஸ் கொடுத்தார். தன் வாழ்நாளில் ஓவியருக்கு காந்தி போஸ் கொடுத்தது அந்த ஒரு நிகழ்வு மட்டுமே. அப்போது, லெய்டன் இந்திய சுதந்திரத்தின் தீவிர ஆதரவாளரான அரசியல் பத்திரிகையாளர் ஹென்றி நோயல் உடன் நண்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டனால் வரையப்பட்ட காந்தி ஓவியம் தான், ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.