கிட்னி விற்பனை விவகாரம் – சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: ஜூலை 23 பள்​ளி​பாளை​யம் கிட்னி விற்​பனை விவ​காரம் தொடர்​பாக திருச்​செங்​கோட்​டில் சுகா​தா​ரத் துறை அதிகாரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யத்​தில் தொழிலா​ளர்​களின் கிட்​னியை இடைத்​தரகர்​கள் மூலம் விற்​பனை செய்​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் கிளம்​பின. அண்​மை​யில், பள்​ளி​பாளை​யத்​தைச் சேர்ந்த பெண், தனது கிட்​னியை பள்​ளி​பாளை​யம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்​தன் என்ற இடைத்​தரகர் மூலம் விற்​பனை செய்த தகவல் வெளி​யானது.
இதுதொடர்​பாக இடைத்​தரகர் ஆனந்​தன் மீது பள்​ளி​பாளை​யம் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டு, போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். இதற்​கிடை​யில், கிட்னி விற்​பனை விவ​காரம் தொடர்​பாக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் உத்​தர​வின் பேரில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.
இக்​குழு​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு சுகா​தா​ரத் திட்ட இயக்​குநர் வினித், சுகா​தா​ரத் துறை சட்​டப்​பிரிவு துணை இயக்​குநர் மீனாட்சி சுந்​தரேசன், காவல் துணைக் கண்​காணிப்​பாளர் சீதா​ராமன் ஆகியோர் நேற்று முன்​தினம் நாமக்​கல் வந்​தனர். அவர்​கள் நேற்று காலை திருச்​செங்​கோடு கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் ஆவண சரி​பார்ப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.
அப்​போது, பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யத்​தில் கடந்த 10 ஆண்​டு​களில் கிட்னி தானம் செய்​தவர்​கள், அவற்​றைப் பெற்​றவர்​கள் உள்​ளிட்​டோர் விவரங்​களை குழு​வினர் திரட்​டினர். அதன் அடிப்​படை​யில் சம்​பந்​தப்​பட்ட நபர்​களை நேரில் வரவழைத்து விசா​ரணை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. மேலும், திருச்​செங்​கோடு மற்​றும் பள்​ளி​பாளை​யத்​தில் சிறப்பு மருத்​து​வக் குழு​வினர் 2 நாட்​கள் விசா​ரணை மேற்​கொள்ள உள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.