மதுரா: ஜனவரி 26 –
பாஜக தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற நிதின் நவீன் முதன்முறையாக நேற்று உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்றார்.அவருக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரா நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதற்காக கூடியிருந்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் நிதின் நவீன் பேசியதாவது:உத்தர பிரதேசத்தில் 2027 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக கட்சி நிர்வாகிகள் இப்போது முதல் தயாராக வேண்டும். தேர்தல் வரும்போது மட்டும் வெளியே வரும் சில சக்திகள், நாட்டைப் பிரிக்கவும், அரசியலமைப்பைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கின்றன.அரசியலமைப்பைப் பற்றி இப்போது பேசுபவர்கள்தான், முன்பு அதனைச் சிதைத்தவர்கள். அராஜகவாதிகளுக்குத் துணை நின்ற அவர்கள் இப்போதும் சுற்றித் திரிகிறார்கள். அவர்களை முறியடிக்க ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் பலப்படுத்த வேண்டும். 2027 தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இங்கு முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத், மாநிலத்தை ‘உத்தம பிரதேசமாக’ மாற்றியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
Home செய்திகள் தேசிய செய்திகள் சட்டசபை தேர்தலுக்கு தயாராகுங்கள்” – உ.பி. நிர்வாகிகளுக்கு நிதின் நவீன் கட்டளை













