சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை

சென்னை: அக்டோபர் 29-
சபரிமலை​யில் மண்டல மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்​காக, தமிழகத்​தில் சென்னை கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம் உள்பட பல்​வேறு இடங்​களில் இருந்து பம்​பைக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட​வுள்​ளன.
இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண்மை இயக்​குநர் இரா.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கேரள மாநிலத்​தில் மிக​வும் பிரசித்​திபெற்ற சபரிமலை​யில் உள்ள ஐயப்​பன் ஆலயத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் நடை​பெறும் மண்டல பூஜை மற்​றும் மகர விளக்கு ஆகிய திரு​விழாக்​களின்​போது, தமிழகத்​திலிருந்து பக்​தர்​கள் சென்று வர ஏது​வாக சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.
அந்​தவகை​யில், இந்த ஆண்​டும் நவ.16-ம் தேதி முதல் ஜன.16-ம் தேதி வரை​யில், சென்னை கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம், திருச்​சி, மதுரை மற்​றும் புதுச்​சேரி, கடலூர் ஆகிய இடங்​களி​லிருந்து பம்​பைக்​கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்​துகள், குளிர்​சாதன பேருந்​துகள் மற்​றும் குளிர்​சாதனமில்லா இருக்கை மற்​றும் படுக்கை வசதி உள்ள சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​பட​வுள்​ளன. சபரிமலை தேவஸ்​தானம் அறி​விப்​பின்​படி, டிச.27-ம் தேதி முதல் டிச.30-ம் தேதி மாலை 5.00 மணி வரை கோயில்நடை சாத்​தப்​படு​வ​தால் டிச.26-ம்தேதி முதல் டிச.29-ம் தேதி சிறப்​புப் பேருந்து இயக்​கப்​படாது.மேலும் குழு​வாக செல்​லும் பக்​தர்​களுக்கு வாடகை அடிப்​படை​யில் பேருந்து வசதி செய்துதரப்​படும். 60 நாட்​களுக்கு முன்​ன​தாக இச்​சிறப்​புப் பேருந்​துகளுக்கு ஆன்​லைன் மூல​மாக, www.tnstc.in மற்​றும் TNSTC Official app ஆகிய இணை​யத்​தளங்​களில் முன்​ப​திவு செய்​து​கொள்​ளும் வசதி​யும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், பேருந்​துகளின் விவரம் உள்​ளிட்ட பல்​வேறு தகவல்​களுக்​கு, 9445014452, 9445014424 மற்​றும் 9445014463 ஆகிய கைப்​பேசி எண்​களைத் தொடர்பு கொள்​ளலாம்.