
நாம் உண்ணும் உணவானது சர்க்கரையாக மாறி நமது ரத்தத்தில் கலந்து, கணையத்தால் இன்சுலினாக மாற்றப்பட்டு ரத்தக்குழாய்கள் மூலம் உடலில் உள்ள செல்களுக்கு பிரித்து அனுப்புகிறது. இந்நிலையில் ஒருவருக்கு இன்சுலின் சுரப்பு சரிவர வேலை செய்யாதபோது சர்க்கரைநோய் ஏற்படுகிறது. இப்படி ஒருவருக்கு சர்க்கரைநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதன்பின் அவர்கள், தங்களை சரியானமுறையில் பராமரிப்பது மிக மிக அவசியமாகும். உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரின் சர்க்கரை அளவைக் கண்டறிய வேண்டும். இது தவிர்த்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிச்சயமாக எச்பி1சி யின் அளவு தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், வருடத்திற்கு ஒருமுறை யூரியா, கிரியாட்டினின் அளவு மைக்ரோஅல்புமின் என்கிற புரதத்தின் அளவை கண்டறிந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ரத்தத்தில் கொழுப்பின் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், வருடத்திற்கு ஒருமுறை கட்டாயமாக கால் பாதம் மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு முறையான பராமரிப்பு செய்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க தவறினால், சர்க்கரை நோயுடன் சேர்ந்து இலவச இணைப்பாக மற்ற நோய்களும் வந்து ஓட்டிக் கொள்ளும். அந்தவகையில் சர்க்கரை நோயின் நண்பர்களாக வந்து சேரும் நோய்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
முதலில் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று இன்சுலின் சுரப்பு குறைவதனால் ஏற்படுவது அல்லது இன்சுலின் சுரப்பு அதிகரிப்பதனால் ஏற்படுவது. அதாவது கணையம் போதுமான இன்சுலினை சுரக்காதபோது ஒரு வகையான பாதிப்புகள் ஏற்படும். அல்லது கணையம் இன்சுலினை போதுமான அளவு சுரந்தாலும், அது சரியாக செல்களுக்கு போய்ச் சேராமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் ஒருவகையாகும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் தலை முதல் பாதம் வரை பல்வேறான
பாதிப்புகள் பலருக்கும் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயின் முக்கிய சிக்கல்கள்
இருதய நோய் மற்றும் பக்கவாதம்: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம், ஏனெனில் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதனால் இதய ரத்த நாளங்களில் உள்ள நரம்புகள் சேதமடைகிறது. இதய பாதிப்பினால் ஏற்படும் பாதிப்புகள்:
எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றல் உணர்வு (ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன்)
வேகமான இதயத் துடிப்பு: மார்பு வலியுடன் கூடிய கரோனரி தமனி நோய் (ஆஞ்சினா), மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் தமனிகள் குறுகுதல் (அதிரோஸ்கிளிரோசிஸ்) ஆகியவை இதில் அடங்கும்.
நரம்பு பாதிப்பு (நரம்பியல்): சர்க்கரை நோய் நரம்புகளை சேதப்படுத்தும். இது உணர்வின்மை, கூச்ச உணர்வு, மற்றும் வலி போன்றவற்றை ஏற்படுத்தும். இது பாதங்களில் புண்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
வெப்பநிலை குளிராக இருந்தாலும், ஓய்வில் இருக்கும்போதும், அல்லது பிற அசாதாரண நேரங்களிலும் அதிகமாக வியர்த்தல்.அல்சைமர் நோய். டைப் 2 சர்க்கரை நோய் அல்சைமர் நோய் போன்ற டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
சிறுநீரக பாதிப்பு (நெஃப்ரோபதி): சிறுநீரகத்தில் உள்ள இரத்த நாளங்கள் சேதமடைவதால், சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படலாம். இது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். மேலும், சிறுநீர்ப்பை பிரச்சினைகளை உருவாக்கி சிறுநீர் கசிவை ஏற்படுத்துகிறது அல்லது சிறுநீர்ப்பையை காலி செய்ய முடியாமல் போகிறது.
கண் பாதிப்பு (ரெட்டினோபதி): சர்க்கரை அதிகரிக்கும் போது கண்களில் உள்ள விழித்திரை பாதிக்கப்பட்டு, பார்வை மங்குதல் அல்லது குருட்டுத்தன்மை ஏற்படலாம். அதாவது, சர்க்கரை நோயாளிகளின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது அவர்களது கண்களில் உள்ள விழித்திரை பாதிக்கப்படுவதுடன் அதில் உள்ள ரத்த நாளங்கள் பலவீனமாகும். ஆரம்பத்தில், எவ்வித அறிகுறியும் இருக்காது. முறையான சிகிச்சை எடுத்து கொள்ளாவிட்டால் நாளடைவில் பார்வையிழப்பு உண்டாகும்.சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் பார்வையிழப்பு உண்டாக இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.Diabetic Macular Edema: விழித்திரையின் ரத்த நாளங்கள் பலவீனமாக இருக்கும்போது, திரவம் வடியத் தொடங்கும். இந்த திரவம், விழித்திரையில் படிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, பார்வையிழப்பு ஏற்படும்.Proliferative Diabetic Retinopathy: விழித்திரையில் புதிய இரத்த நாளங்கள் வளரும். இவை, பலவீனமாக இருப்பதுடன் விரைவில் உடைந்தும் விடும். இதனால் திரவம் வடியத் தொடங்கி, திடீரென பார்வையிழப்பு உண்டாகும்.