சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்நவ.2-ல் விண்ணில் பாய்கிறது

சென்னை: அக். 28-
கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்கெட் மூலம் நவம்​பர் 2-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது. நாட்​டில் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்ரோ) இது​வரை 48 செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்​தி​யுள்​ளது.
அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்​தப்​பட்ட ஜிசாட்-7 (ருக்​மணி) செயற்​கைக்​கோளின் ஆயுள்​காலம் விரை​வில் முடிவடைய உள்​ளது. அதற்கு மாற்​றாக, சுமார் ரூ.1,600 கோடி​யில் அதிநவீன சிஎம்​எஸ்​-03 (ஜி​சாட்​-7ஆர்) செயற்​கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்​ளது. ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து எல்​விஎம்-3 (ஜிஎஸ்​எல்வி மார்க்​-3) ராக்​கெட் மூலம் இந்த செயற்​கைக்​கோள் நவம்​பர் 2-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது.
இதற்​காக, ராக்​கெட் பாகங்​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, அதில் விண்​கலம் பொருத்​தப்​பட்​டுள்​ளது. பின்​னர், ஏவுதளத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்டு தயார் நிலை​யில் உள்​ளது. சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள் 4,400 கிலோ எடை கொண்​டது. இது​வரை புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு ஏவப்​பட்​ட​திலேயே இது​தான் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்​கைக்​கோள்.
இதில் விரிவுபடுத்​தப்​பட்ட மல்டி பேண்ட் தொழில்​நுட்ப வசதி​கள் உட்பட பல்​வேறு நவீன அம்​சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்​திய கடற்​படை மற்​றும் ராணுவத்​தின் பணி​களுக்​காக இந்த செயற்​கைக்​கோள் பயன்​படுத்​தப்பட உள்​ளது. கடலோர எல்​லைகளை கண்​காணிப்​பதுடன், போர்க் கப்​பல்​கள், விமானங்​கள் இடையே பாது​காப்​பான தொலைத் தொடர்பு சேவையை மேம்​படுத்​தி​யும் வழங்கும். ஒட்​டுமொத்​தத்​தில் இந்​தி​யா​வின் கடல்​சார் பாது​காப்பை அதி​கரிப்​பதே இதன் முக்​கிய நோக்​கம். இந்த திட்​டம், எல்​விஎம்-3 ராக்​கெட்​டின் 5-வது ஏவுதல் ஆகும். இதற்கு முன்​பு, சந்​திர​யான்-3 விண்​கலம் இந்த ராக்​கெட் மூல​மாக வெற்​றிகர​மாக விண்​ணில்​ செலுத்​தப்பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.