“சிவசேனா கவுன்சிலர்களை சிறைவைத்துள்ளது ஏன்?”

மும்பை: ஜன.20-
மகா​ராஷ்டிர​ உள்​ளாட்சி தேர்​தலில் மும்பை மாநகராட்சி​யில் மொத்​தம் உள்ள 227 வார்​டு​களில் பாஜக 89 வார்டு​களி​லும், சிவசேனா (ஷிண்டே அணி) 29 வார்​டு​களி​லும் வெற்றி பெற்​றன. ஆளும் கட்​சி​யில் உள்ள இந்த கூட்​ட​ணிக்கு மேயர் பதவியை கைப்​பற்​றும் பெரும்​பான்மை உள்​ளது. ஆனால் மேயர் பதவியை யார் பெறு​வது என்​ப​தில் போட்டி நில​வு​கிறது. இந்​நிலை​யில் தனது கட்​சி​யின் 29 கவுன்​சிலர்​களை மும்​பை​யில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் ஏக்​நாத் ஷிண்டே தங்கவைத்துள்ளார்.இதுகுறித்து சிவசேனா (உத்​தவ் அணி) மாநிலங்களவை எம்.பி. சஞ்​சய் ராவத் கூறிய​தாவது: ஷிண்டே ஏற்​கெனவே தனது கட்சி கவுன்​சிலர்​களை 5 நட்​சத்​திர விடு​தி​யில் சிறை வைத்​துள்​ளார். இதே​போல் தங்​கள் கட்சி கவுன்​சிலர்​களை​யும் பாது​காப்​பான இடத்​தில் வைக்க பாஜக திட்​ட​மிட்டு வரு​கிறது. யார் யாரைக் கண்டு பயப்​படு​கிறார்​கள்? நீங்​கள் ​தான் ஆளும் கூட்​டணி அரசு. இது கேலிக்​கூத்​தாக உள்​ளது.
மும்பை மாநக​ராட்​சி​யில் நாங்​கள் எதிர்க்​கட்சி வரிசை​யில் அமர்​வோமா என்​பதை நாங்​கள் இன்​னும் முடிவு செய்​ய​வில்​லை. அரசி​யலில் நடை​பெறும் மாற்​றங்​களை ரசித்து கொண்​டிருக்​கிறோம். மும்பை மாநக​ராட்சி தேர்​தலில் பாஜக அதிக இடங்​களில் வென்​ற​தால், உலக பொருளா​தார அமைப்​பின் கூட்​டத்​தில் பங்​கேற்க சுவிட்​சர்​லாந்து சென்ற முதல்​வர் தேவேந்திர பட்​ன​விஸுக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.