சென்னையில் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது

சென்னை: ஜூலை 24
பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக்​கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கம் சார்​பில் 72 மணி நேர தொடர் உண்ணா​விரதம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இதில் 200-க்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் பங்கேற்றுள்ளனர்.
அரசு ஊழியர்​களுக்கு புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்படுத்துவது, ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக தமிழக அரசு அமைத்​துள்ள அலு​வலர் குழுவை வாபஸ் பெறு​வது, பணிக்​கொடை (கி​ராஜூ​விட்​டி) மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யம் வழங்​கு​வது ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கம் சார்​பில் 72 மணி நேர தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் சென்னை சேப்​பாக்​கம் எழில​கம் வளாகத்​தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கத்​தின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் எஸ்​.ஜெய​ராஜ​ராஜேஸ்​வரன் தலை​மை​யில் நடை​பெறும் இந்த உண்ணா​விரதப் போராட்​டத்தை தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கத்​தின் முன்​னாள் மாநிலத் தலை​வர் ஆர்​.தமிழ்​செல்வி தொடங்கிவைத்​தார்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கத்​தின் மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் மு.செல்​வக்​கு​மார், பி.பிரடெரிக் எங்​கெல்​ஸ், மாநில நிதி காப்பாளர் சி.ஜான் லியோ சகாய​ராஜ் ஆகியோர் கோரிக்கை விளக்​க​வுரை ஆற்​றினர். பல்​வேறு அரசு ஊழியர்​-ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் போராட்​டத்தை வாழ்த்​திப் பேசினர்.
இந்த தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் குறித்து மாநில ஒருங்​கிணைப்​பாளர் பி.பிரடெரிக் எங்​கெல்ஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “2021 சட்​டப்​பேரவைத் தேர்​தலில் திமுக​வின் பிர​தான தேர்​தல் வாக்​குறு​தி​களில் அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​ட​மும் ஒன்​று. ஆட்​சிக்கு வந்து 4 ஆண்​டுக்கு மேலாகி​யும் இன்​னும் அந்த வாக்​குறு​தியை நிறைவேற்​ற​வில்​லை. வாக்​குறு​தியை தள்​ளிப்​போடு​வதற்​காக குழுக்​களை அமைக்​கின்​றனர்.
குறைந்த செலவே ஏற்படும்: ராஜஸ்​தான், சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட், இமாச்​சலப்​பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​கள் புதிய ஓய்​வூ​திய திட்​டத்​தில் இருந்து மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்கு மாறி​யுள்​ளன. எனவே, திமுக அரசும் தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றும் வகை​யில் தமிழகத்​தில் மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை விரைந்து நடை​முறைப்​படுத்த முன்வர வேண்டும்.
மத்​திய அரசு புதி​தாக அறி​வித்​துள்ள ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை காட்​டிலும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்படுத்​தி​னால் அரசுக்கு குறைந்த செல​வு​தான் ஏற்​படும். எங்​களின் கோரிக்​கையை வலி​யுறுத்தி செப்​டம்​பரில் தற்​செயல்விடுப்பு எடுக்​கும் போராட்​டத்தை நடத்​தவுள்​ளோம்” என்​றார்.
இந்த தொடர் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் 300-க்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், ஓய்​வு​பெற்​றவர்​கள் பங்​கேற்றுள்​ளனர். இப்​போ​ராட்​டம் 26-ம் தேதி (சனிக்​கிழமை) காலை 10 மணிக்​கு முடிவடைகிறது.