செவ்வாய் கிரக கல்; டைனோசர் எலும்புக்கூடு ஏலம்

நியூயார்க்:ஜூலை 14- பூமியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அளவிலான கல்லை, நியூயார்க்கை சேர்ந்த நிறுவனம், 1.7 கோடி ரூபாய் ஆரம்ப தொகைக்கு ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.
பூமியின் மீது அவ்வப்போது விண்கற்கள் விழும் சம்பவங்கள் நடக்கின்றன.
இவை குறித்த தகவல்களை, அமெரிக்க விண்கல் சங்கம் மற்றும் சர்வதேச விண்கல் அமைப்பின் வாயிலாக கண்காணித்து அவற்றை தேடிச்செல்வதை அறிவியல் ஆர்வலர்கள் பொழுதுபோக்காகவும், முழுநேர பணியாகவும் வைத்துள்ளனர். அவ்வாறு விண்கல் ஆய்வாளர்களால், மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் விண்கல் ஒன்று கடந்த 2023 நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டுபிடித்தவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாயில் மிகப்பெரிய விண்கல் மோதல் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து இந்த கல் பிரிந்து 22 கோடி கி.மீ., பயணித்து பூமியை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 25 கிலோ எடையிலான இந்த கல், பூமியில் இருக்கும் செவ்வாய் கிரக கற்களில் மிகப்பெரியது.