
ஹங்சோ, ஜூலை 28- சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங் 40 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாகர் 28 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
















