Home மாவட்டங்கள் பெங்களூர் தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்

தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்

சென்னை: மே 29-
கோடை வெப்​பத்​தால் ஏற்​படும் நோய்​களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநக​ராட்சி சார்​பில் 360 சுகா​தார நிலை​யங்​கள் தயார் நிலை​யில் இருப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.
இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்​தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்​பம் அதி​கரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளி​யேறும்​போது உடலில் உப்​புச்​சத்து மற்​றும் நீர்ச்​சத்து பற்​றாக்​குறை ஏற்​படு​கிறது.
இதனால் அதிக தாகம், தலை​வலி, உடல்​சோர்​வு, தலைசுற்​றல், தசைப்​பிடிப்​பு, குறைந்த அளவு சிறுநீர் வெளி​யேற்​றம், மயக்​கம் மற்​றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்​படலாம். பச்​சிளம் குழந்தைகள், சிறு​வயது குழந்​தைகள், கர்ப்​பிணி பெண்​கள் மற்​றும் முதி​ய​வர்​கள் அதி​கள​வில் பாதிப்படைய வாய்ப்​புள்​ளது.
அதிக அளவில் மோர், உப்பு மற்​றும் மோர் கலந்த அரிசிக்​கஞ்​சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்​சாறு மற்​றும் ஓஆர்​எஸ் உப்​புக்​கரைசல் ஆகிய​வற்றை பருக வேண்​டும். வெளியே செல்​லும்​போது, திறந்​தவெளி​யில் வேலை செய்யும்​போது தலை​யில் பருத்தி துணி, துண்​டு, தொப்பி அணிந்து கொள்ள வேண்​டும். தேவை​யில்லாமல் வெயி​லில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்​டும்.
தீவிர மயக்​கம், உடல் சோர்​வு, அதிக அளவு தாகம், தலை​வலி, கால், மணிக்​கட்டு அல்​லது அடி வயிற்​றில் வலி ஏற்​பட்​டால் மருத்​துவ உதவியை நாட​வேண்​டும். நாடித்​துடிப்​பு, இதயத்​துடிப்​பு, சுவாசம் ஆகிய​வற்றை பரிசோ​திக்க வேண்​டும்.