தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு

பெங்களூரு: ஜூலை 18 – தங்க கடத்​தல் வழக்​கில் நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீனில் வெளியே வர முடி​யாத, ஓராண்டு சிறை தண்​டனை விதித்து பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் உத்​த‌ர​விட்​டுள்​ள‌து. கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக‌ கடந்த மார்ச்​சில் பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.8 கோடி மதிப்​பிலான தங்​க​மும், ரூ.2.4 கோடி ரொக்​க​மும் சிக்​கின. வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள், அவர் மீது சட்​ட​விரோத தங்க கடத்​தல் மற்​றும் அந்​நிய செலா​வணி மோசடி ஆகிய சட்​டப்​பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இவ்​வழக்கு பெங்​களூரு​வில் உள்ள பொருளா​தார குற்​றங்​களுக்​கான சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.இந்​நிலை​யில் நீதி​மன்​றம், தங்க கடத்​தல் வழக்​கில் ர‌ன்யா ராவ் மீதான குற்​றச்​சாட்​டு​கள் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதிகாரி​கள் தரப்​பில் ஆதா​ரத்​துடன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளன. எனவே அவருக்கு சட்​ட​விரோத தங்க கடத்​தல் மற்​றும் அந்​நிய செலா​வணி மோசடி ஆகிய சட்​டப்​பிரிவு​களின்​கீழ் ஓராண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டது.
இதுகுறித்து வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “இந்த பிரி​வின்​கீழ் தண்​டிக்​கப்​பட்​டுள்​ள​தால் ரன்யா ராவ் ஓராண்​டுக்கு ஜாமீனில் வெளியே வர முடி​யாது” என தெரி​வித்​தார். ரன்யா ராவ் தரப்​பில், இந்த தீர்ப்பை எதிர்த்து கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​ய இருப்​ப​தாக தெரிவித்​தனர்.