Home Uncategorized “துர​திர்​ஷ்டம், தடு​மாற்​றத்தால் சரிந்​து​விட்​டோம்” – டெல்லி கேப்டன் அக்சர் படேல் புலம்பல்

“துர​திர்​ஷ்டம், தடு​மாற்​றத்தால் சரிந்​து​விட்​டோம்” – டெல்லி கேப்டன் அக்சர் படேல் புலம்பல்

புதுடெல்லி, ஏப்ரல் 29- ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணிக்கு எதி​ரான போட்​டி​யில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்​டிங் சரிவுக்​கு, முந்​தைய போட்​டி​யின் தாக்கத்​தால் ஏற்​பட்ட தயக்​கம் மற்​றும் துர​திர்​ஷ்டம் ஆகிய​வையே காரணம் என்று கேப்​டன் அக்சர் படேல் தெரி​வித்​துள்​ளார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ஆர்​சிபி அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 16.3 ஓவர்​களில் 75 ரன்​களுக்கு சுருண்டது. அந்த அணி தொடக்​கத்​தில் 8 ரன்​களுக்கு 6 விக்​கெட்​களை தாரை வார்த்​த​தால் சரி​வில் இருந்து மீள முடியாமல் போனது. 76 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி 6.3 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 77 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. அந்த அணிக்கு இது 6-வது வெற்​றி​யாக அமைந்​தது. அதேவேளை​யில் டெல்லி அணி 5-வது தோல்​வியை பதிவு செய்​தது. ஆர்​சிபி அணிக்கு எதி​ரான படு​தோல்விக்கு பின்னர் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யின் கேப்​டன் அக்சர் படேல் கூறிய​தாவது: கடந்த போட்​டி​யில் (பஞ்​சாப் அணிக்கு எதி​ராக 264 ரன்​கள் குவித்த போதி​லும் டெல்லி அணி தோல்வி அடைந்திருந்தது.) நடந்த விஷ​யங்​களால் ஒரு​வித தயக்​கம் இருந்​தது. அதைத் தவிர துர​திர்​ஷ்ட​மும் காரணம் என கருதுகிறேன். எந்த ஒரு பேட்​டரும் நிலைத்து நின்று விளையாட முடிய​வில்​லை. நாங்​கள் ஒன்​றிரண்டு பந்துகளி​லேயே விக்​கெட்​டு​களை இழந்​து​விட்​டோம். நாங்​கள் பேட்​டிங் செய்த விதத்தை துர​திர்​ஷ்டம் என்றே சொல்​வேன். தொடரின் முக்​கிய​மான இறு​திக்​கட்​டத்​தில் அழுத்​தம் என்​பது தவிர்க்க முடி​யாத ஒரு பகு​தி. அதைக்​கண்டு பின்​வாங்க முடி​யாது. ஆஸ்​திரேலிய வேகப்​பந்து வீச்​சாளர் மிட்​செல் ஸ்டார்க் அணி​யுடன் இணைந்​துள்​ளார். எனினும் பணிச்​சுமையை கருத்​தில் கொண்டு மே 1-ம் தேதிக்​குப் பிறகே அவர், களமிறங்​கு​வார். இடது-வலது கை தொடக்க ஆட்​டக்​காரர்​கள் காம்​பினேஷனை கருத்​தில் கொண்டே சஹில் பராக்கை தேர்வு செய்து இருந்​தோம். பயிற்​சி​யின் போது அவர், சிறப்​பாகவே செயல்​பட்டு இருந்​தார். இது அவருடைய முதல் போட்​டி. அதை வைத்து நான் அவரை எடை​போட முடி​யாது. அவர், பேட்​டிங் செய்த விதத்தை வைத்​துப் பார்க்​கும்​போது, அவரிடம் சிறந்த திறமை இருப்​ப​தாக நாங்​கள் நம்​பு​கிறோம். இரண்டு நாட்​களுக்கு முன்​னர் இங்கு நடை​பெற்ற போட்டிக்கு பயன்​படுத்​தப்​பட்ட ஆடு​களம் போன்றே தெரிந்​தது. ஆனால் காற்று மற்​றும் பகல்​-இரவு ஆட்​டச் சூழலால், பந்து அதி​க​மாக ஸ்விங் ஆனது. ஆரம்​பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்​தது அழுத்​தத்தை ஏற்படுத்​தி​யது. தொழில்​முறை வீரர்​களாக நாங்​கள் அதற்​குத் தயா​ராக இருக்க வேண்​டும். அணியை மாற்​று​வது மட்​டும் வெற்​றிக்​கான உத்​தர​வாதத்​தைத் தந்​து​வி​டாது. இது மனநிலை சார்ந்​தது. மன உறு​தி​யுடன் இருப்​பதும், அணியாக ஒற்​றுமை​யுடன் செயல்​படு​வதும்​ முக்​கி​யம்​. இவ்​வாறு அக்​சர் படேல் கூறினார்.