Home செய்திகள் தேசிய செய்திகள் தேர்தல் பார்வையாளர்களில் 62% பேர் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்கள்!

தேர்தல் பார்வையாளர்களில் 62% பேர் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்கள்!

புதுடெல்லி, ஏப்ரல் 16- மேற்கு வங்​கத்​தில் வரும் 23, 29-ம் தேதி​களில் சட்டப்பேர​வைத் தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு 2 கட்​ட​மாக நடைபெறவுள்​ளது. தேர்​தல் சுமூக​மாக​வும், நியாய​மாக​வும் நடைபெறு​வதை உறுதி செய்​வதற்​காக தேர்​தல் பார்வையாளர்களை தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது. ஒவ்​வொரு தொகு​திக்​கும் ஒரு ஐஏஎஸ் அதி​காரி தலை​மை​யில் தேர்​தல் பார்​வை​யாளர்​கள் சிலர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்வாறு நியமிக்​கப்​பட்​டுள்ள தேர்​தல் பார்​வை​யாளர்​களில் 62% பேர் பாஜக ஆளும் மாநிலங்​களில் இருந்து வந்த அதி​காரி​கள் என்று தெரிய​வந்துள்​ளது. புதுச்​சேரி யூனியன், 4 மாநில சட்​டப் பேர​வைத் தேர்​தலுக்​காக தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் 549 பொது தேர்​தல் பார்​வை​யாளர்​கள், 180 போலீஸ் பார்வையாளர்கள், 358 தேர்​தல் செல​வுக் கணக்கு பார்வையாளர்கள் என மொத்​தம் 1,097 தேர்​தல் பார்வையாளர்களை நியமித்​துள்​ளது. இந்த 1,097 பேரில் 54% பேர் மேற்கு வங்​கத்​துக்கு பார்​வை​யாளர்​களாக அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த மூத்த தலை​வர் சாகேத் கோகலே கூறும்​போது, “தேர்​தல் காலங்​களில் முன்​னெப்​போதும் இல்​லாத எண்​ணிக்​கை​யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அதி​காரி​கள், தேர்​தல் நடை​பெறவுள்ள கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்​களுக்கு இடமாற்​றம் செய்யப்பட்​டுள்​ளனர். மறு​புறம், அம்​மாநிலங்​களைச் சேர்ந்த அதிகாரி​களை அனுப்​புவதற்​குப் பதிலாக, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அதி​காரி​களைத் பார்​வை​யாளர்​களாக அனுப்​பி​யுள்​ளது” என்​றார் மேற்கு வங்​கத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்ள 294 பொது பார்வையாளர்களில் 62 % பேர் பாஜக ஆளும் மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​கள். 111 பேர் பாஜக அல்​லாத வேறு கட்​சிகள் ஆளும் மாநிலத்​தைச் சேர்ந்தவர்​கள்.இது குறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் கூறும்​போது, “அச்​சமற்ற, வன்​முறையற்ற, தூண்​டு​தல்​களற்ற தேர்தலை நடத்த வேண்​டும் என்​பதே தேர்​தல் ஆணை​யத்​தின் எண்​ணம். அதே​போல் வாக்​குச்​சாவடியை கைப்​பற்​று​தல் அல்​லது முறை​கேடு​களோ இன்றி தேர்​தல் நடை​பெற வேண்​டும். எங்களுடைய நோக்​கம் நடுநிலையை உறுதி செய்​வது​தான்” என்றார். ஆனால், தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்​கையை அப்​பட்​ட​மான அதி​கார துஷ்பிரயோகம் என எதிர்க்​கட்​சிகள் வர்​ணித்​துள்​ளன.