நக்சலைட்டுகள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள உதவி

ராய்ப்பூர்: ஜூலை 14-
வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வில் இருந்து மாவோ​யிஸ்ட் தீவிர​வாதம் வேரறுக்​கப்​படும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​துள்​ளார்.
இதன்​படி சத்​தீஸ்​கர், ஒடி​சா, ஜார்க்​கண்ட், பிஹார் உள்​ளிட்ட மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட் தீவிர​வா​தி​களுக்கு எதி​ராக அதிதீ​விர நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.
இந்த மாநிலங்​களில் தீவிர​வா​தி​கள் சரண் அடைய​வும் வாய்ப்பு வழங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​படி கடந்த 2024-ம் ஆண்டு முதல் இது​வரை சத்​தீஸ்​கரில் 1,450 மாவோ​யிஸ்ட் தீவிர​வா​தி​கள் சரண் அடைந்​துள்​ளனர். 1,400-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.
மாவோ​யிஸ்ட் தீவிர​வாத அமைப்​பில் இணைந்த இளைஞர்​கள் மற்​றும் இளம்​பெண்​களுக்கு வலுக்​கட்​டாய​மாக கருத்​தடை செய்​யப்​பட்டு உள்​ளது.
இதன்​காரண​மாக சரணடைந்த தீவிர​வா​தி​கள், திரு​மணம் செய்து குழந்தை பெற்​றுக் கொள்​வ​தில் சிரமங்​கள் எழுந்​துள்​ளன. இதுதொடர்​பாக சத்​தீஸ்​கர் உள்​துறை அமைச்​சர் விஜய் சர்மா கூறும்​போது, “சரணடைந்த, கருத்​தடை செய்​யப்​பட்ட தீவிர​வா​தி​கள் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்​றுக் கொள்ள அரசு சார்​பில் உதவி​கள் வழங்​கப்​படும்​’’ என்​று தெரி​வித்​தா​ர்​.