பள்ளி ஆசிரியரை மது போதையில் தாக்கிய 2 மாணவர்கள் கைது

சிவகாசி: ஜூலை 17 –
மது போதை​யில் பள்ளிக்கு வந்​ததைக் கண்​டித்த ஆசிரியரை, 12-ம் வகுப்பு மாணவர்​கள் பாட்​டிலால் தாக்​கிய சம்​பவம் அதிர்ச்சியை ஏற்​படுத்​தியுள்​ளது. மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​தைச் சேர்ந்​தவர் சண்​முகசுந்​தரம்​(47). திருத்​தங்​கல் சி.​ரா. அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் 11, 12-ம் வகுப்​பு​ அரசி​யல் அறி​வியல் துறை ஆசிரிய​ராகப் பணிபுரிந்து வரு​கிறார்.
நேற்று மதி​யம் 11-ம் வகுப்பு மாணவர்​களுக்கு பாடம் நடத்தும் போது, 12-ம் வகுப்பு மாணவர்​கள்சிலர் தாமத​மாக வந்​ததை பார்த்​து, அவர்​களிடம் விசா​ரித்​துள்​ளார். அப்​போது மது வாசனை வந்​த​தால், மாணவர்​களிடம் “மது அருந்தி யுள்​ளீர்​களா?” என்று கேட்​டு, தலைமை ஆசிரியரிடம் வரு​மாறு அழைத்​துள்​ளார். அப்​போது இரு மாணவர்​கள் பையில் வைத்​திருந்த மது பாட்​டிலால் சண்​முகசுந்​த ரத்தை தாக்​கினர்.
இதில் தலை, நெற்​றி, தாடை​யில் வெட்​டுக் காயம் ஏற்​பட்ட நிலை​யில், அவர் திருத்​தங்​கல் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ளார். இது தொடர்​பாக போலீ​ஸார் மற்​றும் பள்​ளிக்​கல்​வித் துறை அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.
இதே பள்​ளி​யில் 2023 டிசம்​பரில் நன்​றாகப் படிக்க அறி​வுறுத்​திய ஆசிரியரை 11-ம் வகுப்பு மாணவர்​கள் இரு​வர் அரி​வாள் மற்​றும் கத்​தி​யால் வெட்​டியது குறிப்​பிடத்​தக்​கது. இதற்கிடையே ஆசிரியரை தாக்கிய 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை திருத்தங்கல் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.