Home செய்திகள் தேசிய செய்திகள் பாலம் இல்லாததால் டிராலியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

பாலம் இல்லாததால் டிராலியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

பித்தோராகர்: ஜூலை 9-
உத்​தர​ாகண்ட் மாநிலம் பாகேஸ்​வர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்​கும் மேற்​பட்ட பள்ளி மாணவர்​கள், பக்​கத்து மாவட்​ட​மான பித்​தோ​ராகரில் உள்ள பள்​ளி​களுக்​குச் செல்​வதற்​காக, ராமகங்கா நதி​யைக் கடக்க இன்​னும் கைகளால் இயக்​கப்​படும் ‘டி​ராலி’யை நம்​பி​யிருக்க வேண்​டிய நிலை உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஏற்​பட்ட வெள்​ளப்​ பெருக்​கில் இப்​பகு​தி​யின் பாலம் அடித்​துச் செல்​லப்​பட்ட நிலை​யில், மக்​களின் தொடர் கோரிக்​கைகளுக்​குப் பிறகும் இது​வரை மீண்​டும் பாலம் கட்​டப்​பட​வில்​லை.
இதனால், மாணவர்​கள் தங்​களது கிராமங்​களி​ல் இருந்து ராமகங்கா நதிக் ​கரைக்கு சுமார் 2 கிலோ மீட்​டர் தூரம் நடந்து வரு​கிறார்​கள்; பின்​னர், அவர்​களின் பெற்​றோர்​கள் இந்த டிராலியைப் பயன்​படுத்​தி, பொங்கி வழி​யும் நதி​யின் வழியே அவர்​களை அக்​கரைக்கு கொண்டு விடு​கிறார்​கள் என்று சமூக ஆர்​வலர் சுந்​தர் சிங் பாத்​யால் தெரி​வித்​துள்​ளார்.இந்த டிராலியை இயக்​கு​வதற்​கு, பொதுப்​பணித் ​துறை ஊழியர்கள் யாரும் நியமிக்​கப்​பட​வில்​லை. கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த டிராலி விபத்​துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்;
6 பேர் காயமடைந்​துள்​ளனர். இந்​தச் சூழல், தற்​போதைய பரு​வ ​மழைக் காலத்​தில் மக்​களின் பாது​காப்பு குறித்த அச்​சத்தை மேலும் அதி​கரித்​துள்​ளது.
குளிர் ​காலத்​தில் நதி​யில் நீர்​மட்​டம் குறை​யும் போது கிராம மக்கள் தற்​காலிக மரப்​பாலத்தை அமைத்​துக் கொண்​டாலும்,
பருவ ​மழைக் காலத்​தில் வேறு வழி​யின்றி பாகேஸ்​வர் மாவட்ட பொதுப்​பணித் ​துறை​யால் நிறு​வப்​பட்ட இந்த ஆபத்​தான டிராலியையே நம்​பி​யிருக்க வேண்​டிய கட்​டா​யத்​திற்​குத் தள்ளப்படு​கின்​றனர்.இது குறித்து பாகேஸ்​வர் பொதுப்​பணித்​துறை பொறி​யாளர் கிருஷ்ணா
பிப்​லியா கூறுகை​யில், ”இப்​பகு​தி​யில் 110 மீட்​டர் நீளமுள்ள பாலம் அமைப்​ப​தற்​கான விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டு உள்​ள​தாக​வும், அனு​மதி கிடைத்​தவுடன் முன்னுரிமை அடிப்​படை​யில் பாலம்​ கட்​டும்​ பணி தொடங்கப்படும்​” என்​றும்​ தெரி​வித்​துள்​ளார்