பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள்

சென்னை: அக்டோபர் 29- தமிழகத்​தில் பிளஸ் 1 மாணவர்​களுக்கு இலவச சைக்​கிள் விரைந்து வழங்​கு​வதற்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டது.இதுகுறித்து துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: 2025-26-ம் கல்​வி​யாண்​டில் மாணவ, மாணவி​களுக்கு இலவச சைக்​கிள் வழங்​க அவோன், ஹீரோ சைக்​கிள் நிறு​வனங்​களுக்கு கொள்​முதல் ஆணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அந்​தவகை​யில் மாணவி​களுக்கு ரூ.4,250 மதிப்​பிலும், மாணவர்​களுக்கு ரூ.4,375 மதிப்​பிலும் சைக்​கிள்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. கொள்​முதல் ஆணை பெற்ற நாளில் இருந்து 15 நாட்​களுக்குள் சைக்​கிள்​களை விநி​யோகிக்க தொடங்க வேண்டும்.
சைக்​கிள் வழங்​கும் திட்​டம் முதல்​வ​ரால் தொடங்​கி​வைத்த பின், அந்​தந்த மாவட்​டங்​களில் மாணவர்​களுக்கு வழங்க வேண்​டும். 3 ஆண்டு உத்​தர​வாத அட்டை வழங்​கப்​படுவதை உறு​தி​செய்ய வேண்​டும்.
சைக்​கிள்​கள் விநி​யோகம் செய்​யப்​பட்ட 6 மாதங்​களுக்கு பிறகு, ஒவ்​வொரு ஊராட்சி ஒன்​றி​யத்​தி​லும் குறைந்​தது 3 நாட்​களுக்கு பழுது நீக்​கு​வதற்​கான சிறப்பு மு​காம் நிறு​வனத்​தால் நடத்​தப்​படு​வதை உறு​தி​செய்ய வேண்​டும்​.இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.