பெங்களூர் – நீதிபதி அறிக்கையால் சிக்கல்

பெங்களூரு: ஜூலை.26-
பெரிய அளவிலான நிகழ்வுகள் நடத்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் பாதுகாப்பானது அல்ல நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
2025 பிரிமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, முழு விசாரணையை நடத்தி முடித்து, அதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், கூட்ட நெரிசல் விபரீதத்திற்கு ஆர்சிபி அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த சரியான திட்டம் இல்லை, அனுமதி பெறுவதில் குளறுபடிகள் உள்ளன.
சின்னசாமி மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகள் நடத்த பாதுகாப்பானது அல்ல, தகுதியற்றது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குன்ஹாவின் அறிக்கை, கர்நாடகாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் அதே தருணத்தில், 2026ம் ஆண்டு இந்த மைதானத்தில் பிரிமீயர் லீக் போட்டிகளை நடத்த முடியாது.