“மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய்” – காங். பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மறுப்பு

புதுடெல்லி: பிப்ரவரி 13
நா​டாளு​மன்​றத்​தில் நடந்​த​தாக மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறு​வது பொய் என்று காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செயலர் பிரி​யங்கா காந்தி மறுப்பு தெரி​வித்​துள்​ளார்.
கடந்த பிப்​ர​வரி 4ம் தேதி மக்களவையில் பிரதமரை சூழ்ந்து கொண்டு காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் தாக்க திட்டமிட்டனர் என்​று சபா​நாயகர் ஓம் பிர்லா தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில் மக்களவை​யில் காங்​கிரஸ் பெண் எம்​.பி.க்​கள் நடத்​திய ஆர்ப்பாட்டம் மற்​றும் அவைத் தலை​வர் ஓம் பிர்லா அறைக்​குள் சென்று வாக்​கு​வாதம் செய்​தது ஆகிய வீடியோக்​களை மத்​திய நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு வெளி​யிட்​டுள்​ளார்.
மேலும், 20-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வின் அறைக்​குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்​டிய​தாக கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி நேற்று கூறிய​தாவது:
சபா​நாயகர் ஓம் பிர்லா அறைக்​குள் சென்ற நாங்​கள் யாரை​யும் திட்​ட​வில்​லை. 2 எம்​.பி.க்​கள் மட்​டும் கிளர்ந்​தெழுந்​தனர்.
அவர்​கள் அதை வெளிப்​படுத்​தினர். நான் அவர்​களை ஊக்​கு​வித்​த​தாக மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறுகிறார். இது முழுக்க முழுக்க பொய். நான் அமை​தி​யாக அமர்ந்​திருந்​தேன்.
இறு​தி​யில், நான் சில விஷ​யங்​களை அமை​தி​யாகச் சொன்​னேன். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​திக்கு எதி​ராக வழக்​கு​கள் தொடருதல் உள்​ளிட்ட அனைத்​தை​யும் அவர்​கள் செய்வார்​கள்.
ஆனால் எது​வும் ராகுல் காந்​தியை பா​திக்க போவதில்​லை. இவ்​வாறு பிரி​யங்​கா காந்​தி கூறி​னார்​.