Home மாவட்டங்கள் பெங்களூர் மாரடைப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

மாரடைப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

பெங்களூரு: மே 15 –
பெங்களூர் நகர சிறப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சிவப்பா நாயக், மாரடைப்பு காரணமாகக் காலமானார்.
2010 பேட்ச் அதிகாரியான நாயக், நீண்ட காலமாக காவல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு வயது 56. நேற்று இரவு சிவப்பா நாயக்கருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் நகரின் புகழ்பெற்ற ஜெயதேவ இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காததால், அவர் இன்று உயிர் நீத்தார்.
பெல்காம் மாவட்டம், பைலஹொங்கலா தாலுக்காவில் உள்ள சோமஹட்டியைச் சேர்ந்த சிவப்பா நாயக், 2010-ல் காவல் துறையில் சேர்ந்தார். அவர் நகரின் நகர சிறப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.