Home விளையாட்டு மீண்டு வருமா லக்னோ அணி? – ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்

மீண்டு வருமா லக்னோ அணி? – ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்

லக்னோ, ஏப்ரல் 22- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ​வில் உள்ள ஏகானா கிரிக்​கெட் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் – ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ரியான் பராக் தலை​மையி​லான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்விகளுடன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. முதல் 4 ஆட்​டங்​களி​லும் தொடர்ச்சியாக வெற்​றிகளை குவித்த அந்த அணி கடைசியாக விளை​யாடிய 2 ஆட்​டங்​களி​லும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தத் தவறியது. பேட்​டிங்​கில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், வைபவ் சூர்​ய​வன்ஷி மற்​றும் துருவ் ஜுரெல் ஆகிய முதல் மூன்று வீரர்​களே பலமாக இருந்து வரு​கின்​றனர். இவர்​கள் சோபிக்​கத் தவறும் போதெல்​லாம் அந்த அணி பெரும் போராட்​டத்தை எதிர்​கொள்​கிறது. தோல்வி அடைந்த 2 ஆட்​டங்​களில் ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ராக தொடக்க வீரர்​களான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் ஒரு ரன்​னிலும், வைபவ் சூர்​ய​வன்ஷி ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்து இருந்​தனர். ஆனால் கொல்​கத்​தாவுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்த ஜோடி 8 ஓவர்​களில் 81 ரன்​கள் விளாசி​யது. இருப்​பினும் நடு​வரிசை​யில் ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்​ரன் ஹெட்​மயர், டோனோவன் பெரைரா உள்​ளிட்​டோரிடம் இருந்து தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை. சஞ்சு சாம்​சனின் வெளி​யேற்​றத்​துக்​குப் பிறகு, எதிர்​பா​ராத வித​மாக கேப்​ட​னாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ரியான் பராக், பேட்​டிங்​கில் மிக​வும் மோச​மான காலக்​கட்​டத்தை எதிர்​கொண்​டுள்​ளார். நடப்பு தொடரில் அவர், இது​வரை விளை​யாடிய 6 ஆட்​டங்​களில் 3 முறை ஒற்றை இலக்க ரன்​களில் ஆட்​ட​மிழந்​துள்​ளார். அவரது அதி​கபட்ச ஸ்கோர் 20 மட்​டுமே. அனுபவ வீர​ரான ரவீந்​திர ஜடேஜா​விடம் இருந்து வெற்​றிக்​கான பங்​களிப்பு வெளிப்​பட​வில்​லை. அதிரடி வீரரான ஷிம்​ரன் ஹெட்​மயர் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி வெறும் 39 ரன்​களே எடுத்​துள்​ளார். இவர்​கள் பார்​முக்கு திரும்​பி​னால் மட்​டுமே அணி​யின் பலம் அதி​கரிக்​கும். பீல்​டிங்​கிலும் ராஜஸ்​தான் அணி முன்​னேற்​றம் காண வேண்​டும். இருப்​பினும் அது அவ்​வளவு எளி​தாக இருக்​காது. ஏனெனில் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யால் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் பந்​து​வீச்சு வரிசை சிதைக்​கப்​பட்டு இருந்​தது. அந்த ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி 254 ரன்​களை குவித்து மிரட்​டி​யிருந்​தது. பிரியன்ஸ் ஆர்​யா, கூப்​பர் கானொலி ஜோடி 2-வது விக்​கெட்​டுக்கு 13.2 ஓவர்​களில் 182 ரன்​களை வேட்​டை​யாடி இருந்​தது. இவர்​களின் அதிரடி ஆட்​டம் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் பந்​து​வீச்சை நிலைகுலை​யச் செய்​து, கடும் அழுத்​தத்​திற்கு உள்ளாக்கியது. இதில் பிரின்ஸ் யாதவ் மட்​டுமே நம்​பிக்​கையூட்​டும் ஒளிக்​கீற்​றாகத் திகழ்ந்​தார். அவர், அந்த ஆட்​டத்​தில் 25 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​களை கைப்​பற்​றிருந்​தார். வேகப்​பந்து வீச்​சாளர்​களான ஆவேஷ் கான், முகமது ஷமி ஆகியோர் பந்​தைக் கட்​டுப்​படுத்த முடி​யாமல் திணறி வரு​கின்​றனர். அதே​போல், மணி​மாறன் சித்​தார்த்​தின் பந்​து​வீச்​சிலும் அதிக ரன்​கள் கசிந்​துள்​ளன. எனினும் இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் பலவீன​மான மிடில் ஆர்​டர் பேட்​டிங்கை லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் குறிவைக்​கக்​கூடும். அதே நேரத்​தில், லக்னோ அணி​யின் பேட்​டிங் வரிசை​யும் ஒரு நிலை​யற்ற தன்​மை​யிலேயே காணப்​படு​கிறது.