ரஜினி, கமல், தனுஷுக்குகொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

சென்னை: அக். 29-
‘வெடிகுண்டு வீசி தாக்​கு​வோம்’ என நடிகர்​கள் ரஜினி, கமல் மற்​றும் தனுஷுக்கு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது குறித்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சமீப கால​மாக அரசி​யல் பிரபலங்​கள், கல்வி நிறு​வனங்​கள், திரை பிரபலங்​கள் மற்​றும் விமான நிலை​யங்​கள், ஆளுநர் மாளிகை என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று அதி​காலை இ-மெ​யில் ஒன்று வந்​தது.
அதில், நடிகர்​கள் ரஜினி, கமல்​ஹாசன், தனுஷ் ஆகியோர் மீது வெடிகுண்டு வீசி தாக்​கப்​போவ​தாக கூறப்​பட்​டிருந்​தது. பொது​வாக வீடு​கள், அலு​வல​கங்​களில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாகத்​தான் மிரட்​டல் வரும். ஆனால், வெடிகுண்டு வீசப்​படும் என்று வந்த தகவல் பெரும் அதிர்ச்​சியை உண்​டாக்​கியது.
இதையடுத்து போயஸ் கார்​டனில் உள்ள ரஜினி​காந்த் மற்​றும் தனுஷ் வீடு​களி​லும், ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள கமல்​ஹாசன் வீடு, அலு​வல​கத்​தி​லும் போலீ​ஸார் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் சென்று சோதனை நடத்​தினர். ஆனால், சந்​தேகப்​படும்​படி​யான எந்​தப் பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.
இதே​போல சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வீடு, பாஜக மூத்த தலை​வர் சுப்​பிரமணி​யன்​சாமி​யின் சாந்​தோம் இல்​லத்​துக்​கும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. அங்கு சோதனை நடத்​தி​ய​தில் அது​வும் புரளி என்​பது தெரிய​வந்​தது. வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த நபர்​கள் குறித்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்​.​ தாம்​பரம் அருகே மணிமங்​கலம் ஊராட்சி அம்​பேத்​கர் தெரு​வில் தமிழக காங்​கிரஸ் தலை​வரும், ஸ்ரீபெரும்​புதூர் எம்​எல்​ஏவு​மான செல்​வப்​பெருந்​தகை​யின் வீடு உள்​ளது. படப்​பை​யில் அவரது அலு​வல​கம் உள்​ளது. இந்த இடங்​களுக்​கும் வெடிகுண்டு மிரட்​டல் வந்​த​தால் போலீ​ஸார் தீவிர சோதனை நடத்​தினர். சோதனை​யில் குண்டு மிரட்​டல் வெறும் புரளி என்​பது தெரிய​வந்​தது. மேலும், சென்னை தி.நகர் போக் ரோட்​டில் உள்ள நடிகர் பிரபு வீட்​டிலும் போலீ​ஸார் வெடிகுண்டு சோதனை நடத்​தினர்​.