ராகுல் காந்தி ஆதரவு – பிஜேபி விமர்சனம்

புதுடெல்லி: ஜனவரி 14-
​ஜனநாயகன் திரைப்​படத்​துக்கு தணிக்கை சான்று வழங்​காமல் தடுப்​பது, தமிழ் கலாச்​சா​ரத்​தின் மீதான தாக்குதலாகும்” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் குற்றம் சாட்​டி​யுள்​ளார்.
நடிகர் விஜய் நடித்த ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் கடந்த 9-ம் தேதி வெளி​யிடப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. ஆனால், இந்​தப் படத்​தில் ஆட்​சேபனைக்​குரிய கருத்​துகள் இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.
இதற்கு தணிக்கை சான்று வழங்​கு​வ​தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பட வெளி​யீடு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், ஜனநாயகன் படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்காமல், மத்​திய அரசு முடக்​கி​யுள்​ளது என்ற சர்ச்சை எழுந்துள்​ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “ஜன​நாயகன் திரைப்​படத்தை மத்​திய அரசு முடக்​கி​யிருப்​பது, தமிழ் கலாச்​சா​ரத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதலாகும். பிரதமர் மோடி அவர்​களே, தமிழ் மக்​களின் குரலை ஒடுக்​கும் இந்த முயற்​சி​யில் நீங்​கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று தெரி​வித்​துள்​ளார்.
இதுகுறித்து பாஜக செய்​தித் தொடர்​பாளர் சி.ஆர்​.கேசவன் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “வெட்​கமற்ற பழக்க வழக்​க​முள்ள பொய்​யர் மற்​றும் போலி செய்​தி​களை விற்பவர் ராகுல் காந்​தி.
மத்​தி​யில் காங்​கிரஸ் தலை​மையி​லான யுபிஏ ஆட்​சி​யில்​ தான் ஜல்​லிக்​கட்​டுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஜல்​லிக்​கட்டு காட்டுமிராண்​டித்​தன​மானது என்று காங்​கிரஸ்​காரர்​கள் கூறி தமிழர்​களின் உணர்​வு​கள், கலாச்​சா​ரம், பெருமை போன்​றவற்றை அவம​தித்​தனர்.
காங்​கிரஸ் அரசு​ தான் ஜல்​லிக்​கட்டை கடுமை​யாக எதிர்த்​தது. ஆனால், ஜல்​லிக்​கட்​டுக்கு பிரதமர் மோடி ஆதர​வளித்​தார். அதன்​பிறகு ஜல்​லிக்​கட்​டுக்​கான தடை நீக்​கப்​பட்​டது. அதற்​காக அவருக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்.
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட விவ​காரம் நீதி​மன்​றத்​தில் உள்​ளது. ராகுல் காந்தி இப்​போது வெளி​யிட்​டுள்ள கருத்​து, அவரது உள்​நோக்​கத்​தை காட்​டு​கிறது” என்​று தெரி​வித்​துள்​ளார்.