விசாரணையின் போது பலி

உடுமலை: ஆக.1-
வனத் துறை​யின​ரால் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்​ட​வர் உயி​ரிழந்த நிலை​யில், பழங்​குடி மக்​கள் வனத்துறை அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தினர். திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள மேல் குருமலை மலை​வாழ் கிராமத்தை சேர்ந்​தவர் மாரி​முத்​து(45). விவ​சா​யி. இவரது மனைவி பாண்​டி​யம்​மாள், மகள்​கள் சிந்​து, ராதிகா.மாரி​முத்து உள்​ளிட்ட 4 பேர் மீது சில ஆண்​டு​களுக்கு முன்பு கஞ்சா கடத்​தல் உள்​ளிட்ட வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. அவற்றில் இருந்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதி​மன்​றத்​தால் மாரி​முத்து விடுவிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் மூணாறு செல்​வதற்​காக பேருந்தில் சென்ற மாரி​முத்​து​வை, சின்​னாறு வனத் துறை சோதனைச்​சாவடி​யில் இருந்த வனத் துறை​யினர் பிடித்து விசா​ரித்​துள்​ளனர். அப்​போது மாரி​முத்​து​விடம் புலி​யின் பல் இருந்​த​தாகக் கூறப்படுகிறது.
பின்​னர், உடுமலை வனச்​சரக அலு​வல​கத்​துக்கு மாரி​முத்​துவை அழைத்​துச் சென்று இரவு முழு​வதும் விசா​ரித்​துள்​ளனர். இதுகுறித்து மாரி​முத்​து​வின் குடும்​பத்​துக்கு தகவல் அளிக்​க​வில்​லை. இதற்​கிடை​யில், நேற்று காலை வனத் துறை அலு​வல​கத்​தில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் மாரி​முத்து இறந்​து கிடந்​துள்​ளார்.
தகவலறிந்து வந்த உடுமலை டிஎஸ்பி நமச்​சி​வா​யம் தலை​மையி​லான போலீ​ஸார் மாரி​முத்​து​வின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். இதுகுறித்து தகவலறிந்த மாரி​முத்​து​வின் உறவினர்​கள் மற்​றும் மலை​வாழ் கிராம மக்​கள் உடுமலை வனச்​சரக அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தினர். வனத் துறை​யினர் மாரி​முத்​துவை அடித்​துக் கொன்​ற​தாக அவர்​கள் குற்றம்​சாட்​டினர்.
இதுகுறித்து மலை​வாழ் மக்​கள் சங்​கத்​தினர் கூறும்​போது, “வனத் துறை அதி​காரி​கள் மீது எஸ்​.சி. எஸ்​.டி. வன்​கொடுமை சட்​டத்​தில் வழக்கு பதிவு செய்ய வேண்​டும். விசா​ரணை என்ற பெயரில், மாரி​முத்​துவை வனத் துறை​யினர் அடித்​துக் கொன்​றிருக்​கலாம் என சந்​தேகிக்​கிறோம்” என்​றனர். மாரி​முத்​து​வின் மனைவி பாண்​டி​யம்​மாள் உடுமலை காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரில், “நாங்​கள் பழங்​குடி​யினர்.