உடுமலை: ஆக.1-
வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த நிலையில், பழங்குடி மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள மேல் குருமலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(45). விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள், மகள்கள் சிந்து, ராதிகா.மாரிமுத்து உள்ளிட்ட 4 பேர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இருந்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தால் மாரிமுத்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மூணாறு செல்வதற்காக பேருந்தில் சென்ற மாரிமுத்துவை, சின்னாறு வனத் துறை சோதனைச்சாவடியில் இருந்த வனத் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது மாரிமுத்துவிடம் புலியின் பல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், உடுமலை வனச்சரக அலுவலகத்துக்கு மாரிமுத்துவை அழைத்துச் சென்று இரவு முழுவதும் விசாரித்துள்ளனர். இதுகுறித்து மாரிமுத்துவின் குடும்பத்துக்கு தகவல் அளிக்கவில்லை. இதற்கிடையில், நேற்று காலை வனத் துறை அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாரிமுத்து இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்து வந்த உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான போலீஸார் மாரிமுத்துவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும் மலைவாழ் கிராம மக்கள் உடுமலை வனச்சரக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். வனத் துறையினர் மாரிமுத்துவை அடித்துக் கொன்றதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறும்போது, “வனத் துறை அதிகாரிகள் மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணை என்ற பெயரில், மாரிமுத்துவை வனத் துறையினர் அடித்துக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்” என்றனர். மாரிமுத்துவின் மனைவி பாண்டியம்மாள் உடுமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நாங்கள் பழங்குடியினர்.















