Home மாவட்டங்கள் பெங்களூர் விரைவில் மகளிர் உரிமைத் தொகை

விரைவில் மகளிர் உரிமைத் தொகை

சென்னை: மே 15-
மே மாதத்​துக்​கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். இத்​திட்​டத்தை அரசு மறுசீரமைப்பு செய்ய உள்​ள​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.
தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படித்த மாணவர்​கள் இடைநிற்​றல் இல்​லாமல் உயர்​கல்​வியைத் தொடர்​வதற்​காக புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் ஆகிய கல்வி உதவித் தொகை திட்​டங்​கள் முந்​தைய திமுக ஆட்​சி​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டன. அதன்​படி, புது​மைப்​பெண் திட்​டத்​தில் மாணவி​களுக்​கும், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தில் மாணவர்​களுக்​கும் மாதம்​தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாத​மும் 7-ம் தேதி இந்த தொகை வரவு வைக்​கப்​பட்டு வந்​தது.
இந்த நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. முந்​தைய அரசுகளால் கொண்டு வரப்​பட்ட முக்​கிய மக்​கள் நலத் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் உறுதியளித்​தார். இதன் தொடர்ச்​சி​யாக, புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​பட்டு வந்த ரூ.1,000 உதவித் தொகை அனைத்து மாணவ, மாணவி​களின் வங்​கிக் கணக்​கிலும் நேற்று வரவு வைக்​கப்​பட்​டது. இதனால் மாணவர்​கள், பெற்​றோர் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.
இதற்​கிடையே, தமிழகம் முழு​வதும் 1.31 கோடி பெண்​களின் வங்​கிக் கணக்​கில் ஒவ்​வொரு மாதம் 15-ம் தேதி​யும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில், ‘மகளிர் உரிமைத் தொகை திட்​டத்தை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்​படு​கிறது. நடப்பு மே மாதத்​துக்​கான உரிமைத் தொகை, பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் விரை​வில் வரவு வைக்​கப்​படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதே​நேரம் முதல்​வரின் அறி​விப்பை திமுக தலை​வர் ஸ்டா​லின் விமர்​சனம் செய்​துள்​ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில், ‘தி​முக அரசின் திட்​டங்​கள் தொடரும் என்று சட்​டப்​பேர​வை​யில் சொன்​னீர்​கள்? மகளிர் உரிமைத் தொகையை மே 15-ம் தேதி வரவு வைக்க வேண்​டும். ஏற்​கெனவே உள்ள திட்​டத்தை தொடர எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்​யப் போகிறீர்​கள்? மாதம் ரூ.2,500 தரு​வ​தாக வாக்​குறுதி தந்​து​விட்​டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்​தடிப்​பது​தான் உங்​கள் மாற்​ற​மா?’ என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.
முதல்​வர் ஆலோ​சனை: அரசின் நிதி​நிலை​யைப் பொருத்து நலத் ​திட்​டங்​களை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்​டும். அரசின் நிதி​நிலை தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிடப்படும் என்று கடந்த 10-ம் தேதி முதல்​வ​ராக பதவி​யேற்ற விழா​விலேயே விஜய் தெரி​வித்​திருந்​தார்.