15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின

சென்னை: அக். 23-
தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், இது​வரை 15 அணை​கள், 1,522 ஏரி​கள் நிரம்​பி​ உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் அரசுத் துறை​கள் மும்​முர​மாக இறங்கி உள்​ளன.
தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த அக்​.16-ம் தேதி தொடங்​கியது. அன்று முதல் தமிழகம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 2 இடங்​களில் அதி கனமழை​யும், 23 இடங்​களில் மிக கனமழை, 53 இடங்​களில் கனமழை​யும் பெய்​துள்​ளது.
இதனால் அணை​கள், ஏரி​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. ஏற்​கெனவே நிரம்​பி​யுள்ள நீர்​நிலைகளுக்கு வரும் தண்​ணீர் உபரி நீராக அப்​படியே வெளி​யேற்​றப்​படு​கிறது. உபரிநீர் வெளி​யேறும் நீர்​நிலைகளை உன்​னிப்​பாக கண்​காணிக்க அதி​காரி​களுக்கு அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதனிடையே அணை​கள், ஏரி​களில் உள்ள நீர் இருப்பு குறித்து நீர்வள ஆதா​ரத் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழகத்​தில் சென்​னை, மதுரை, கோவை, திருச்சி மண்​டலங்​களில் உள்ள 90 அணை​கள் மற்​றும் நீர்த்​தேக்​கங்​களில் மொத்த கொள்​ளளவு 224 டிஎம்சி (2.24 லட்​சம் மில்​லியன் கன அடி). நேற்​றைய நில​வரப்​படி 196 டிஎம்சி (87.77 சதவீதம்) நீர் இருப்பு உள்​ளது. மாநிலம் முழு​வதும் 38 மாவட்​டங்​களில் மொத்​தம் 14,141 ஏரி​கள் உள்​ளன. இவற்​றில் 1,522 ஏரி​கள் முழு​வது​மாக நிரம்​பி​யுள்​ளன. அவற்​றில், அதி​கபட்​ச​மாக கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் 390 குளங்​கள் நிரம்​பி​யுள்​ளன. 77 முதல் 99 சதவீதம் வரை 1,832 ஏரி​களும், 51 முதல் 75 சதவீதம் வரை 1,842 ஏரி​களும் நிரம்​பி​யுள்​ளன. அதே​நேரம் 620 குளங்​கள் தண்​ணீர் இல்​லாமல் வறண்டு கிடக்​கின்​றன.
சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதா​ர​மாக விளங்​கும் பூண்​டி, சோழ​வரம், செம்​பரம்​பாக்​கம், தேர்​வாய்க்கண்​டிகை, வீராணம் ஆகிய ஏரி​களின் மொத்த கொள்​ளளவு 13,222 மில்​லியன் கன அடி. நேற்​றைய நில​வரப்​படி நீர் இருப்பு 9,986 மில்​லியன் கன அடி​யாக (75.53 சதவீதம்) உள்​ளது. இதே தேதி​யில் கடந்த ஆண்டு நீர் இருப்பு 6,105 மில்​லியன் கன அடி​யாக இருந்​தது. மேலும், செம்​பரம்​பாக்​கம், புழல், பூண்டி ஆகிய​வற்​றில் முன்​கூட்​டியே வெள்ள நீர் திறக்​கப்​பட்டு போது​மான இடைவெளி பராமரிக்​கப்​பட்டு வரு​ வ​தால், மிக கன மழை பெய்​தா​லும், வெள்ள நீர் திறப்​பின் அளவு மட்​டுப்படுத்​தப்​பட்டு அடை​யாறு மற்​றும் கொசஸ்​தலை ஆற்​றில் பாது​காப்​பாக கடலைச் சென்​றடை​யும். எனவே பொது​மக்​கள் அச்​சப்படத் தேவை​யில்​லை. இவ்​வாறு நீர்வள ஆதா​ரத் துறை தெரி​வித்​துள்​ளது.