
ஜோத்பூர், மே 18- கூட்டு பாலியல் வன்கொடுமை, பிளாக் மெயில் ஆகியவற்றால் விரக்தியடைந்த 2 சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு உள்ளூரைச் சேர்ந்த மஹிபால் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவர் அங்குள்ள இ-மித்ரா சேவை மைய ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். அவர் தன்னுடன் பழகிய இளம் பெண்ணின் ஆபாச வீடியோக்களை ரகசியமாக பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோவை காட்டி பிளாக் மெயில் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் மட்டும் அல்லாமல் அவரது நண்பர்களும் இளம் பெண்ணை மிரட்டி சுமார் 4 ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு பிளாக் மெயில் செய்து பணமும் பறித்துள்ளனர். பல ஆண்டுகளாக நீடித்த இந்த கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த இளம்பெண் கடந்த மார்ச் 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இளம் பெண்ணின் சகோதரி போலீஸில் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி புகார் அளித்தார்.

















