தந்தை, இரு மகன்கள் மர்ம மரணம்

சென்னை: ஜூலை 3-சென்னை புழலில் ஒரே குடும்​பத்தை சேர்ந்த தந்​தை, இரு மகன்​கள் மர்​ம​மான முறை​யில் சடல​மாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்​கள் தற்​கொலை செய்து கொண்​டார்​களா? அல்​லது வீட்​டில் இயங்கி கொண்​டிருந்த ஜெனரேட்​டரில் இருந்து வெளி​யான புகை​யில் மூச்சு திணறி உயி​ரிழந்​தார்​களா? என போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.சென்​னை, புழல் அடுத்த கதிர்​வேடு, பிரிட்​டானியா நகர் பகு​தியை சேர்ந்​தவர் செல்​வ​ராஜ் (57). இவர் லாரி டிரான்​ஸ்​போர்ட் முன்​ப​திவு அலு​வல​கம் நடத்தி வந்​தார். இவருக்​கு, மாலா என்ற மனை​வி​யும், 17 வயதில் ஒரு மகளும், 10-ம் வகுப்பு படிக்​கும் சுமன்​ராஜ் (15), 8 வகுப்பு படிக்​கும் கோகுல்​ராஜ் (13) என்ற இரு மகன்​களும் உள்​ளனர்.நேற்​று​முன்​தினம் இரவு செல்​வ​ராஜ் தனது குடும்​பத்​தினருடன் இரவு உணவு அருந்​தி​விட்​டு, தனது இரு மகன்​களு​டன் தூங்க சென்​றார். அவரது மனை​வி​யும், மகளும் வேறொரு அறை​யில் உறங்​கினர். இந்​நிலை​யில், நேற்று காலை நீண்ட நேர​மாகி​யும் செல்​வ​ராஜ், இரண்டு மகன்​களும் அறையை விட்டு வெளியே வராத​தால், அவரது மனைவி மாலா அக்​கம்​பக்​கத்​தினர் உதவி​யுடன் அறை​யின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்​தார்.அப்​போது, அறை​யினுள், ஜெனரேட்​டர் புகை சூழ்ந்து இருந்​தது. கரும்​பு​கைக்கு மத்​தி​யில் செல்​வ​ராஜும், இரு மகன்​களும் வாயில் நுரை தள்​ளியப்​படி சடல​மாக கிடந்​தனர்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாலா​வும், அவரது மகளும், மூவரின் உடல்​களை பார்த்து கதறி அழுதனர்.இதுகுறித்​து, போலீ​ஸாருக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டது. விரைந்து வந்த புழல் போலீ​ஸார், மூன்று பேரின் உடல்​களை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். நேற்று முன் தினம் இரவு அப்​பகு​தி​யில் மின்​சா​ரம் தடைப்​பட்​டுள்​ளது.