கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்:பட்டயக் கணக்காளர் தற்கொலை

மும்பை: ஜூலை 9 – ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்​டயக் கணக்​காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்​தரங்க வீடியோக்களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​போவ​தாக மிரட்டி ராகுல் பர்​வானி, சபா குரேஷி ஆகிய இரண்டு நபர்​கள் கடந்த 18 மாதங்​களாக பல கோடி ரூபாயை ராஜ் லீலா​விடம் இருந்து பறித்​துள்​ளனர்.
இந்த நிலை​யில் மேலும் பணம் கேட்டு அவருக்கு நெருக்​கடி கொடுத்​ததையடுத்து அந்த பட்​டயக் கணக்​காளர் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ராஜ் லீலா​வுக்கு பங்​குச் சந்​தை​யில் அதிக முதலீடு​கள் மற்​றும் அதிக சம்​பளம் பெறு​வதை தெரிந்து கொண்டு திட்​ட​மிட்டு அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர்.மேலும், அவர் பட்​டயக் கணக்​காள​ராக வேலை செய்​யும் நிறு​வனத்​தின் பணத்தை தங்​களது சொந்த வங்​கிக் கணக்​குக்கு மாற்​றக் கோரி​யும் ராஜ்லீலா​வுக்கு நெருக்​கடி கொடுத்​துள்​ளனர். வேறு வழி​யில்​லாமல் ராஜ் லீலா இந்த முடிவை எடுத்​த​தாக கூறப்படுகிறது.
தற்​கொலை செய்​வதற்கு முன்​பாக அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யுள்​ள​தாவது: நான், ராஜ் மோர். எனது சாவுக்கு ராகுல் பர்​வானி​தான் காரணம். அவர் என்னை மிரட்டி பல கோடி ரூபாய் பணத்தை பறித்​தார். கடந்த சில மாதங்​களாக மேலும் பணம் கேட்டு நெருக்​கடி கொடுத்​தார்.
எனது சேமிப்பு மற்​றும் நிறு​வனத்​தின் கணக்​கி​லிருந்து பணத்தை திருடி​னார். எனவே என் மரணத்​துக்கு ராகுல் பர்​வானி, சபா குரேஷி ஆகியோர்​தான் காரணம். இவ்​வாறு ராஜ் மோர் அந்த கடிதத்​தில் தெரி​வித்​துள்​ளார்.